Skip to main content

சிரியாவில் வெடிக்குண்டு சத்தத்தை கேட்டு சத்தமிட்டு சிரிக்கும் தந்தை மகள் வைரல் வீடியோ!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

பல வருடங்களாக உள்நாட்டு போரில் அவதிப்பட்டு வரும் சிரியாவில், கடந்த இரண்டு வாரங்களாக கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் இட்லிப் நகரை மீட்பதற்காக சிரியா ஆர்மியும் ரஷ்யாவும் கூட்டாக இணைந்து வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பலரும் தங்க வீடின்றி நகரை விட்டு வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
 

syria viral video

 

 

சிரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள சாராகுஃப் பகுதியிலிருந்து உள்நாட்டுப் போர் காரணமாக வலுக்கட்டாயமாக பல குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் அப்துல்லா முகமத் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வெளியேற்றப்பட்டதால் தற்போது தன் நண்பரின் இல்லம் இருக்கும் சர்மதா பகுதியில் வசித்து வருகிறார்கள்.

அவர்கள் தங்கியிருக்கும் பகுதியின் அருகே சிரிய அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் வான்வெளி சண்டை நடந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு வெடிகுண்டு சத்தங்கள் சகஜமான ஒன்றாக மாறியுள்ளது. அந்த பகுதிகளில் வாழும் குழந்தைகள் இதுபோன்ற சத்தத்தால் பெரிதும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


இந்நிலையில் அப்துல்லா தனது நான்கு வயது மகளுக்கு மேலிருந்து கீழே விழுகும் வெடிகுண்டு சத்தத்தை கேட்டால் சிரிக்கும்படி கற்றுக்கொடுத்திருக்கிறார். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் விமானமா? வெடிகுண்டா? என்று தனது மகளிடம் அவர் கேட்க, அதற்கு மகள் செல்வா வெடிகுண்டு என்று சொன்னவுடன் குண்டு சத்தம் கேட்கிறது. உடனே அப்பாவும் மகளும் வாய்விட்டு சிரிக்கிறார்கள். இந்த காட்சி வீடியோவை காண்பவர் மனதை வருடுகிறது. உலகம் முழுவதும் வைரலாகும் இந்த வீடியோவை பார்த்து பலரும் ஆபத்தான நிலையிலும் தன் மகளை சிரிக்க வைக்கும் தந்தை பாராட்டி வருகிறார்கள். பெரும்பாலானோர் ஆதிக்கம் செலுத்துவதற்காக அப்பாவி மக்களை இறையாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அதிகார வர்க்க நாடுகளை கண்டித்து, மக்களுக்காக வருந்துகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சூடானில் உள்நாட்டுப் போர்; இந்தியர் பலி

Published on 16/04/2023 | Edited on 16/04/2023

 

Civil War in Sudan; Indian passed away

 

சூடானில் நடந்த உள்நாட்டுப்போரில் இந்தியர் ஒருவர் பலியாகியுள்ளார். 

 

சூடானை கடந்த 2021 ஆம் ஆண்டில் ராணுவம் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் துணை ராணுவப்படைகளை ராணுவத்தில் இணைப்பது தொடர்பாக ராணுவத் தளபதிக்கும் துணை ராணுவ கமாண்டருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

 

அப்போதில் இருந்தே அந்நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வப்போது உள் நாட்டுப் போர் நடந்து வந்த நிலையில் நேற்று சூடான் தலைநகரில் ராணுவத்தினருக்கும் துணை ராணுவத்தினருக்கும் போர் நடந்து வருகிறது. சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம் அதிபர் மாளிகை ஆகியவற்றை கைப்பற்றியதாக துணை ராணுவம் அறிவித்தது.

 

தொடர்ந்து நடந்த போரில் பொதுமக்கள் 56 பேர் கொல்லப்பட்டனர். இந்தியர் ஒருவரும் இதில் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இறந்தவரின் பெயர் ஆல்பர்ட் அகஸ்டின் என்றும் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்திருப்பதாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. ட்விட்டரில் தூதரகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “சூடானில் உள்ள டால் குரூப் நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரு ஆல்பர்ட் ஆஜெஸ்டின், நேற்று வழி தவறிய புல்லட் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலதிக ஏற்பாடுகளைச் செய்ய குடும்பம் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக இந்திய தூதரகம், சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், நிதானமாக செயல்பட்டு வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

 


 

Next Story

"நாம் ஒன்றிணைவோம்" - பாதிக்கப்பட்டவர்களுக்கு சன்னி லியோன் உதவி

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

Sunny Leone help to Turkey earthquake victims

 

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரும் பாதிப்பை உண்டாக்கியது. இதில் தற்போது வரை 46,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இது சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் பல நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.   

 

அந்த வகையில், நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் டேனியல் வெபரும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். இது தொடர்பாக சன்னி லியோன் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "எங்கள் நிறுவனம் ஸ்டார் ஸ்ட்ரக் மூலம் நிலநடுக்கத்தால் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளோம். நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு எங்கள் வருவாயில் 10 சதவீதத்தை நன்கொடையாக வழங்கவுள்ளோம். 

 

நாம் ஒன்றிணைந்தால் கண்டிப்பாக இழந்ததை நம்பிக்கையோடு மீட்டெடுக்கலாம். தேவைப்படுபவர்களுக்கு கை கொடுங்கள். நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க எங்களுடன் சேர்ந்து உதவுங்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார். சன்னி லியோன் தொடர்ந்து அனாதை குழந்தைகளுக்கு உதவி வருகிறார். அதையடுத்து தற்போது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்திருப்பது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.