போர்ச்சுக்கல் நாட்டில் ராட்சத மரம் விழுந்ததில்
குழந்தைகள் உட்பட 13 பேர் பலி
போர்ச்சுக்கல் மதேயரா பகுதியில் மத விழா ஒன்று பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் தங்களின் குழந்தைகளுடன் கலந்து கொண்டிருந்தனர். அப்போது விழா நடந்து கொண்டிருந்த வளாகத்தில் இருந்த 200 ஆண்டுகள் பழமையான ஓக் வகையைச் சேர்ந்த மரம் திடீரென வேறுடன் சாய்ந்து விழுந்தது. அப்போது மரத்திற்கு அடியில் நின்றுகொண்டிருந்த குழந்தைகள் உட்பட 13 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 52 பேர் பாடுகாயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு
மதேயராவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.