Published on 24/09/2018 | Edited on 24/09/2018

தெற்காசிய நாடான மாலத்தீவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலின் முடிவு வெளியாகியுள்ளது. இத்தேர்தலில் எதிர்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது வெற்றிபெற்றுள்ளார். மாலத்தீவு அதிபர் தேர்தலில் சுமார் 92 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. இதில் வெற்றிபெற்ற இப்ராகிம் முகமது 1,33,808 வாக்குகள் பெற்றுள்ளார். தற்போது அதிபாரக இருக்கும் அப்துல்லா யாமீன் 95,526 பெற்று தோல்வி அடைந்துள்ளார். மேலும் அண்மைக்காலமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அப்துல்லா யமீன் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.