துருவங்கள் 16 படத்தின் மூலம் அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இவர் தற்போது கழுகு-2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜாம்பி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்களுக்கு ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் போட்டு கொடுத்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை யாஷிகா. பொழுது போக்கு பூங்கா ஒன்றுக்கு சென்ற யாஷிகாவை சூழ்ந்த ரசிகர்கள் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டுள்ளனர். அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு தரும்போது பேப்பர் இல்லாத ரசிகர்களுக்கு அவர்கள் வைத்திருந்த ருபாய் நோட்டுகளில் கையெழுத்து போட்டு தந்தார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் மட்டுமே கையெழுத்து போட அதிகாரமுள்ள இந்திய ருபாய் நோட்டில் யாஷிகா கையெழுத்து போட்டது தற்போது சர்ச்சையாகி வருகிறது.