Skip to main content

தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன், தொகுதி பின்னர் அறிவிக்கப்படும் - கமல் அறிவிப்பு!

Published on 14/12/2020 | Edited on 14/12/2020
jk

 

வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது முதற்கட்ட பிரச்சாரத்தை மதுரை மற்றும் நெல்லை மண்டலங்களில் நேற்று முதல் டிசம்பர் 16 வரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். 

 

இந்நிலையில் இன்று மதுரையில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "எங்களது கருத்து யாருக்குக் குத்தலாக இருக்குமோ அவர்கள் எங்களின் பேச்சுக்களைத் தடைகளைச் செய்வார்கள். அதனை மீறியும் பிரச்சாரம் தொடரும். மூன்றாவது அணி அமைவது சாத்தியமே. ஆனால், எப்போது சாத்தியம் என்பதை இப்போது கூறமுடியாது.  வரும் தேர்தலில் கண்டிப்பாக நான் போட்டியிடுவேன். அது எந்த தொகுதி என்பது பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்