Skip to main content

வடமாநில வாலிபர் கொலை; பெண் உட்பட மூவர் கைது

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

west bengal young man incident in trichy 

 

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் விக்ரம் (வயது 34). இவர் திருச்சி புத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள பல்வேறு உணவகங்களில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை திருச்சி கோட்டை ரயில் நிலைய பகுதியில் நின்றிருந்த போது, அங்கிருந்த பெண் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பலுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த மூவரும் சேர்ந்து விக்ரமை அடித்து உதைத்துள்ளனர். இதனால் வலி தாங்க முடியாமல் அவர் மாரிஸ் திரையரங்கம் நோக்கி ஓடிச் சென்றுள்ளார். எனினும் அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்று மாரிஸ் பாலம் அருகே  உள்ள ஒரு கடையின் வாசலில் வைத்து கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அலறி துடித்த விக்ரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

இதையடுத்து 3 பேரும் தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், திருச்சி உறையூர், விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த கணவரை இழந்த தீபிகா (வயது 27) கைக்குழந்தையுடன் தனியாக வசித்து வந்த நிலையில், சத்திரம் பகுதியில் பானிபூரி வியாபாரம் செய்து வந்த இவருக்கும் விக்ரமுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கோட்டை கீழ சிந்தாமணியைச் சேர்ந்த பாலா (வயது 34), சந்துக்கடை பகுதியைச் சேர்ந்த கணேசன் (வயது 35), நண்பர்களான இவர்களுக்கும் தீபிகாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில், நேற்று மாலை பாலா, கணேசன் இருவரும் சேர்ந்து விக்ரமை கண்டித்ததாகவும், அதில் ஏற்பட்ட பிரச்சினையில் இருவரும் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மூவரையும் போலீசார் அடுத்த சில மணி நேரங்களில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் எம்.சத்யபிரியா, துணை ஆணையர் அன்பு, ஆய்வாளர் தயாளன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.