Skip to main content

கழிவு நீர் வெளியேற்றம்; மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Waste water discharge Pollution Control Board action

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் தனியாருக்குச் சொந்தமான மில் ஜவுளி ஆலையிலிருந்து முறைகேடாகக் குழாய் அமைத்துக் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வந்துள்ளது. இது குறித்துக் கடந்த 9 ஆம் தேதி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து கழிவு நீரைச் சுத்திகரிப்பு செய்யாமல் சட்டவிரோதமாகக் கழிவு நீரை வெளியேற்றியே ஜவுளி ஆலையின் மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு  துண்டிக்கப்பட்டுள்ளது. பெருந்துறை சிப்காட்டில் கடந்த 3 மாதங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக இதுவரை 7 தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்