Skip to main content

‘பணம் கொடுக்கிறீயா, இல்ல போஸ்டர் ஒட்டவா?’ - ஆடியோவால் சிக்கிய விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

Vishwa Hindu Parishad administrator who threatens money

 

“ஒழுங்கா நா கேக்குற பணத்த கொடுத்துடு.. இல்லனா உன்ன பத்தி தப்பு தப்பா போஸ்டர் ஒட்டிடுவோம்” என பாதிரியாருக்கு வலைவீசும் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகியின் ஆடியோ சோசியல் மீடியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

 

அரியலூர் மாவட்டம் எம்.ஐ.என் நகர் பகுதியில் உள்ள தூய லூர்து அன்னை ஆலயத்தில் பாதிரியாராக இருப்பவர் டோமினிக் சாவியோ. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்த ஆலயத்தில் பங்குத்தந்தையாக இருந்து வரும் நிலையில், ஆர்.சி. பள்ளியின் தாளாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், பாதிரியார் டோமினிக் சாவியோவிற்கு எதிராகவும், அவர் நடத்தி வரும் பள்ளிக்கு எதிராகவும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்டச் செயலாளர் முத்துவேல் என்பவர் தொடர்ந்து அவதூறு பரப்பி வந்துள்ளார்.

 

மேலும், இந்த முத்துவேல் மீது 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறி சில கிறிஸ்தவர்களைத் தாக்கியது, இரு மதத்தினர் இடையே பகைமையைத் தூண்டும் விதத்தில் நோட்டீஸ் அடித்து ஒட்டியது என ஏகப்பட்ட வழக்குகள் இவர் மீது இருக்கின்றது.

 

அதுமட்டுமின்றி, கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் தஞ்சை பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை மதமாற்றம் செய்யக்கோரி வற்புறுத்தியதால் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பொய்யான வீடியோவை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவரும் இந்த முத்துவேல் தான். இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது டோமினிக் சாவியோவிற்கு எதிராக அவதூறு பரப்பி வந்துள்ளார்.

 

"கிறிஸ்துவ பள்ளிக்கூடங்களில் படிக்கும் இந்துக்களே உஷாராக இருங்கள். உங்கள் பிள்ளைகளை இங்கு படிக்க வைக்காதீர்கள். அரியலூர் பள்ளிக்கூடங்களில் இந்துப் பெண்களை வன்கொடுமை செய்யும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற வார்த்தைகளுடன் பிளக்ஸ் போர்டு அடித்து அரியலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே வைக்கப்படும் எனவும், பாதிரியாருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் கூறிக்கொண்டு முத்துவேல் தலைமையில் டோமினிக் சாவியோவை கட்டம் கட்டியுள்ளனர்.

 

அதுமட்டுமின்றி, அவரிடம் 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த டோமினிக் சாவியோ, தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் பணம் ஏதும் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளார். அதன்பிறகு, பாதிரியார் டோமினிக் சாவியோவை பழிவாங்க நினைத்த முத்துவேல், அவரை பற்றி சோசியல் மீடியாவில் அவதூறு பரப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் தனது பொறுமையை இழந்த டோமினிக் சாவியோ முத்துவேல் மீது அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் முத்துவேலை கைது செய்த போலீசார், அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியான முத்துவேலின் ஆடியோ, சோசியல் மீடியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.