Skip to main content

'வரிச்சியூர் செல்வமும்... வருமான வரித்துறையும்...' - வீடியோவால் விளைந்த சிக்கல்!

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

'Varichyoor selvam ... Income tax department ...' - The problem caused by the video!

 

மதுரை மாவட்டம் வரிச்சியூரை சேர்ந்தவர் செல்வம். இவர் ஒரு காலத்தில் தேடப்படும் பிரபல ரவுடியாக இருந்தார். தங்க நகைகள் அணிவதில் ஈடுபாடு கொண்ட வரிச்சியூர் செல்வம் செல்லும் இடங்களுக்கெல்லாம் கிலோ கணக்கில் கழுத்து, கைகளை ஆபரணங்களால் நிரப்பிக்கொண்டுதான் போவார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுடன் விமானத்தில் அருகே அமர்ந்து சென்றது, காஞ்சிபுரம் அத்திவரதரை விஐபி தரிசனத்தில் பார்த்தது என சில ஆண்டுகளுக்கு முன் வைரலாக தென்பட்டார். அதிலும் கரோனா நேரத்தில் 10 பவுனில் மாஸ்க் செய்து அணிகொண்ட புகைப்படங்கள் வைரலாகி இருந்தது. தற்பொழுது ரவுடி வரிச்சியூர் செல்வம் திருந்தி வாழ்வதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் அண்மையில் வரிச்சியூர் செல்வம் நகைக்கடை ஒன்றில் 100 பவுன் மதிக்கத்தக்க முறுக்கு செயினை அணிந்துகொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அந்த வீடியோவில் கடையின் ஊழியர்களே அந்த ஜெயினை செல்வத்திற்கு அணிவித்தனர். இத்தொடர்பாக வருமானவரித்துறை விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மதுரை சொக்கிகுளம் வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " வரிச்சியூர் செல்வம் 100 பவுன் மதிக்கத்தக்க முறுக்கு செயினை அணிந்து கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அப்படி அவர் வாங்கியிருந்தால் அந்த நகைக்கான பணத்தை சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் ரொக்கமாக கொடுத்தாரா? அல்லது காசோலையாகக் கொடுத்தாரா? என விசாரணை மேற்கொள்ளப்படும். இவ்வளவு அதிக தங்கம் வாங்க அவருக்கு பணம் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது, அந்த நகைக்கு ஜிஎஸ்டி செலுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க இருக்கிறோம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.