Skip to main content

அடுத்தடுத்து மூதாட்டிகள் கொலை; சைக்கோ வாலிபர் சிக்கினார்!

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

two old ladies passes away case police arrested youth in namakkal

 

பள்ளிபாளையம் பகுதியில் வீட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டிகளைக் குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த சைக்கோ வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஓடப்பள்ளியைச் சேர்ந்தவர் பாவாயம்மாள் (65). இவர் கடந்த மார்ச் 19ம் தேதி, முக்குப்பாறை என்ற பகுதியில் கரும்பு தோட்டத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். உடற்கூராய்வில் பாவாயம்மாள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரை கொலை செய்தது யார் என்ற துப்பு கிடைக்காமல் காவல்துறையினர் திணறி வந்தனர். 

 

இந்நிலையில், பள்ளிபாளையம் பில்லுமடைக்காடு பகுதியில் தனியாக வசித்து வந்த பழனியம்மாள் (64) என்ற மூதாட்டியும், மே 11ம் தேதி மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அவருடைய சடலத்தை மே 12ம் தேதி காவல்துறையினர் கைப்பற்றி, உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். பழனியம்மாளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு, கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

 

பாவாயம்மாள், பழனியம்மாள் ஆகிய இருவரின் கொலையின் தன்மையும் ஒரே மாதிரி இருந்ததால், இந்த இரு சம்பவத்திலும் ஒரே ஆள் அல்லது ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என பள்ளிபாளையம் காவல்துறையினர் கருதினர். எனினும், இவ்விரு சம்பவத்திலும் ஒரு துப்பும் கிடைக்காமல் தடுமாறினர். இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், பழனியம்மாளிடம் இரண்டு ஆண்டுக்கு முன்பு வேலை செய்து வந்த செல்வம் (32) என்ற வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். 

 

கூலித்தொழிலாளியான செல்வத்தின் சொந்த ஊர், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் ஆகும். இவர்தான், அவ்விரு மூதாட்டிகளையும் கொலை செய்திருப்பது தெரியவந்தது. கடந்த 5 ஆண்டுக்கு முன்பு பள்ளிபாளையம் அண்ணா நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். பிறகு, விலாங்கட்டூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விவசாயக் கூலி வேலைகளுக்குச் சென்று வந்துள்ளார். 

 

யாரிடமும் சகஜமாக பேசிப் பழக்கம் இல்லாத அவர், மக்கள் கூட்டம் உள்ள இடங்களுக்குச் செல்வதை தவிர்த்து வந்துள்ளார். பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் இல்லாத காடுகள் உள்ளிட்ட ஒதுக்குப்புறமான இடங்களில் மட்டுமே சென்று வந்த செல்வம், ஆதரவின்றி தனியாக வசிக்கும் மூதாட்டிகளிடம் மட்டும் நட்பாக பழகி வந்துள்ளார். நன்றாக பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பிறகு அவர்களிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்வதும், காரணமே இல்லாமல் அவர்களைக் கொலை செய்வதுமாக இருந்துள்ளார். 

 

இதேபோல்தான் சம்பவத்தன்று ஓடப்பள்ளி பாவாயம்மாளுடன் கரும்பு காட்டில் வைத்து பாலியல் உறவு கொண்டுள்ளார் செல்வம். அதன்பிறகு அவரை திடீரென்று கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். அதேபோல் பில்லுமடைக்காடு பாவாயம்மாளையும் பாலியல் வன்கொடுமை செய்த பிறகு, அவரை கல்லால் தாக்கிக் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. சில நேரம் அவர் சைக்கோ போல முன்னுக்குப் பின் முரணாக பேசியதாகவும் கூறுகின்றனர். 

 

உண்மையில் அவர் தனியாக வசிக்கும் மூதாட்டிகளை குறி வைத்துக் கொலை செய்யும் சைக்கோவா அல்லது அவ்வாறு  நடிக்கிறாரா என சந்தேகமாக இருப்பதால் அவரை மனநல மருத்துவர் மூலம் பரிசோதிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர். 

 

இதையடுத்து செல்வத்தைக் கைது செய்ததோடு, கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல வேறு யாரையாவது கொலை செய்துள்ளாரா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஜி காங். தலைவர் கொலை வழக்கு; ஜூன் 5க்கு தள்ளி வைப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ex tamilnadu Congress leader case was adjourned to June 5
தாளமுத்து நடராஜன்

தமிழகத்தையே உலுக்கிய சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, ஒரு மர்மகும்பல் இவருடைய வீட்டுக்குள் நுழைந்தது. மர்ம நபர்கள், வீட்டுக் காவலாளி கோபாலை கொலைசெய்துவிட்டு, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த தாளமுத்து நடராஜனின் மகன்களை தாக்கி, தனி அறையில் அடைத்தனர்.

பின்னர் அந்த வீட்டில் இருந்த 250 பவுன் நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்கள், உள்பக்கமாக தாழிட்டு இருந்த மற்றொரு அறைக் கதவை தட்டினர். அப்போது துப்பாக்கி சகிதமாக வெளியே வந்த தாளமுத்து நடராஜனை கொள்ளையர்கள் இரும்புகம்பியால் அடித்துக் கொலை செய்தனர். அதையடுத்து அங்கிருந்து, இரட்டைக்குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

ex tamilnadu Congress leader case was adjourned to June 5
ஜெயில்தார் சிங்

தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த இந்தச் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில், இந்தசம்பவத்தின் பின்னணியில் வட இந்தியாவைச் சேர்ந்த கொடூர கொள்ளை கும்பலான பவாரியா குழுவினருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் மெத்தம் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கொள்ளை கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஷாண்டோ ஆகிய நான்கு பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் 3ஆவதுகூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்துவிட்டது. இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தங்கள் தரப்பிலும் சாட்சிகள் இருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும்ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஸ்ரீராமஜெயம் உத்தரவிட்டுள்ளார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதாடி வருகிறார். 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.