Skip to main content

தோட்டத்தில் வைத்து இரண்டு சிறார் படுகொலை-சேலத்தை அதிர வைத்த சம்பவம்

Published on 16/10/2024 | Edited on 16/10/2024
 two minors in a garden - an incident that shook Salem

சேலத்தில் இரண்டு சிறார்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் ஒடுவன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி சித்ரா. ராஜா-சித்ரா தம்பதிக்கு நவீனா (17) என்ற மகளும், சுகன் (14) என்ற மகனும் உள்ளனர். அதேபகுதியில் வசித்துவரும் தனசேகர் என்பவருக்கும் ராஜாவுக்கும் இடையே நிலத்தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக இருவரும் அடிக்கடி மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராஜா, தனசேகருடைய மனைவியிடம் பேசிப் பழகி வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தனசேகர், தன்னுடைய மனைவியுடன் பேசக்கூடாது என ராஜாவை பலமுறை எச்சரித்துள்ளார். ஆனாலும் கேட்காத ராஜா, தனசேகரின் மனைவிக்கு தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. ராஜாவை மிரட்டுவதற்காக அவருடைய தோட்டத்திற்கு சென்றுள்ளார். தோட்டத்தில் ராஜாவுடைய மகனும் மகளும் பூ பறித்துக் கொண்டிருந்தனர். ராஜாவுடைய மகனையும் மகளையும் தனசேகர் கொடுவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இருவரின் சத்தம் கேட்டு ராஜா ஓடிச் சென்று பார்த்துள்ளார். அப்போது ராஜாவையும் தனசேகர் சரமாரியாக வெட்டியுள்ளார். ராஜாவும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

மூன்று பேரையும் அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறுவனும் சிறுமியும் ஏற்கனவே உயிரிழந்தது மருத்துவப் பரிசோதனைக்கு பின் தெரியவந்தது. தற்போது ராஜா சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை செய்து வருகிறார். கொலையை நிகழ்த்திய தனசேகர் தலைமறைவான நிலையில் அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இரண்டு சிறார்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்