Skip to main content

தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு!! 11-வது நாளாக இரட்டை இலக்கத்தில் தொடரும் உயிரிழப்பு!!!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020
today corona rate in tamilnadu

 

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்1,927 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் தமிழகத்தில் ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000 என்ற எண்ணிக்கை 11வது நாளாக தொடர்ந்து வருகிறது.


இன்று 1,008 பேர் கரோனாலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,841 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இன்று 16,667 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 1,927 பேருக்கு  கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஆறாவது நாளாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு 17,179 பேர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று உறுதியானவர்களில் 1,392 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதனால் எட்டாவது நாளாக சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000 என்ற நிலையில் தொடர்ந்து வருகிறது.

 

 


அதேபோல் சென்னையில் ஒட்டுமொத்த பாதிப்பு என்பது 26 ஆயிரத்து நெருங்குகிறது. இதுவரை 25,937 பேருக்கு அங்கு கரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இதுவரை 260 பேர் சென்னையில் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கரோனா உயிரிழப்பு எண்ணிக்கையானது 326 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 19 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 7 பேரும், அரசு மருத்துவமனையில் 12 பேரும் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் 11 வது நாளாக கரோனா உயிரிழப்பு எண்ணிக்கையானது இரட்டை இலக்கத்தில் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அடுத்த 3 மணி நேரம்; 9 மாவட்டங்களுக்கு அலர்ட்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
For the next 3 hours; Alert for 9 districts

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், சென்னை,  செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி தமிழகத்தின் நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்திய வானிலை ஆய்வு மையம் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் அதீத கனமழை பொழிந்து வருகிறது. குடகு உட்பட ஐந்து மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின்  ஹசன் மாவட்டத்தில் இன்று கனமழைக்கான  மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் தட்சண கன்னடா மாவட்டத்தில் மூல்கி பகுதியில் 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Next Story

10 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் 

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Rain alert for 10 districts

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும், விழுப்புரம், நாமக்கல், விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.