Skip to main content

முதல்வரை வரவேற்று பேனர், கொடி வைக்க தடை- திருப்பத்தூர் ஆட்சியர் சிவன் அருள் அறிவிப்பு!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களின் நிர்வாக பணிகளை முதல்வர் பழனிசாமி, ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று தொடங்கி வைத்து வருகிறார். 


அதன் தொடர்ச்சியாக நவம்பர் 28- ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழாவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வருகிறார். இந்த வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் ஆலோசனை நடத்தினார்.

TIRUPATTUR AND RANIPET NEW DISTRICTS INAUGURATION FLEX BAN COLLECTOR ORDER


ஆலோசனையில், முதல்வரை வரவேற்க, அதிமுக உட்பட எந்த ஒரு அமைப்புக்கும் பேனர் வைக்க, பிளாஸ்டிக் கொடி, தோரணம் கட்ட, சாலையோரம் இரும்பு கம்பியில் கொடி கட்ட அனுமதி கேட்டால் அனுமதி தரக்கூடாது. அதேபோல் அப்படி கட்டியிருந்தால் உடனடியாக அதனை அகற்ற வேண்டும். மேலும் நலத்திட்ட உதவி பெறும் பட்டியலில் உள்ள பயனாளிகள் அதிகாரிகள் அழைத்து வந்து, அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்றவற்றை தந்து சிறப்பாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்றார்.


 

சார்ந்த செய்திகள்