Skip to main content

மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்! 

Published on 07/07/2022 | Edited on 07/07/2022

 

Three I.P.S. Officials transferred
வந்திதா பாண்டே

 

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த வந்திதா பாண்டே புதுகோட்டை எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வுப்பிரிவு ஐ.ஜியாக இருந்த பவானீஸ்வரி, லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி (இணை இயக்குநராக) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் சென்னை அமலாக்கத்துறை ஐ.ஜி துரைகுமார், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்புப் புலனாய்வுப்பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், புதுக்கோட்டை எஸ்.பியாக இருந்த நிஷா பார்த்திபன் அயல் பணியில் மத்திய உளவுப்பிரிவுக்கு செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்