Skip to main content

நண்பனுடன் பேசியதை கண்டித்த அண்ணன்; விபரீத முடிவெடுத்த தங்கை

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

thiruvannamalai school girl incident police areested her cousin

 

திருவண்ணாமலை மாவட்டம், வானாபுரம் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் கூலித் தொழிலாளி தம்பதியின் மகளான சுபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வானாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சுபாவின் பக்கத்து வீட்டில் பெரியப்பா சங்கர் குடும்பம் வசித்து வருகிறது. சங்கர் மகன் பிரசாந்த்தை சந்திக்க பக்கத்து தெருவை சேர்ந்த அவரது நண்பன் தமிழரசன் என்கிற இளைஞர் அடிக்கடி வீட்டுக்கு வந்துள்ளார். பிரசாந்த்தை சந்திக்க வந்த தமிழசரனுக்கு பக்கத்து வீட்டிலிருந்த சுபாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது பிரசாந்த்துக்கும் தெரிந்துள்ளது. மேலும் பிரசாந்த் தனது நண்பனுக்கும் – தங்கைக்கும் இடையே இணைப்பாக இருந்துள்ளான்.

 

நெருங்கிய நண்பர்களாக இருந்த பிராசாந்த் – தமிழரசன் இடையே சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இருவரும் பேசிக் கொள்வதில்லையாம். மார்ச் 3 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த சுபாவிடம் தமிழரசன் சாலையில் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனைப் பார்த்த பிரசாந்த், தமிழரசனை இரண்டு அடி அடித்துவிட்டு, தனது சித்தப்பா மகள் சுபாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்த சுபா சிறிது நேரத்தில் பக்கத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிணற்றின் உரிமையாளர், சுபா தற்கொலை செய்து கொண்டதை கண்டு தகவல் சொல்ல ஊர்க்காரர்கள் சென்று உடலை மீட்டுள்ளனர். தற்கொலைக்கு தூண்டியதாக பிரசாந்த் மீது வானாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

“என் மகள் அவனை காதலிக்கவில்லை; காதலித்ததாக நினைத்துக் கொண்டு அவன் கிட்ட எல்லாம் பேசாத என அடித்து உதைத்து தெருவில் இழுத்து வந்துள்ளான். அந்த அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளாள் என் மகள். என் மகள் தவறு செய்தால் பெற்றவர்களான எங்களிடம் தானே சொல்ல வேண்டும். அவளை அடிக்க அவன் யார்? இப்போது என் மகள் செத்துப் போனாளே... அவளை அவன் திருப்பி கொண்டு வருவானா?” எனக் கேள்வி கேட்டு அழுதிருக்கிறார் அந்த தாய். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.