Skip to main content

“ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட உனக்கு என்ன தகுதி இருக்கிறது?” -சமுதாய கூட்டத்தில் கேள்வி எழுப்பியவர் கொலை!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

உள்ளாட்சி தேர்தல் ஜுரத்தில், அதுவும் என்ன செய்தாவது பதவியைக் கைப்பற்றியே தீரவேண்டும் என்ற வெறியில், தமிழகத்தில் அங்கங்கே சிலர் போடும் ஆட்டம் சொல்லி மாளாது.‘இது எல்லாமே பணத்துக்குத்தான்டா..’ என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. விருதுநகர் மாவட்டம்- சாத்தூர் வட்டம்- வெம்பக்கோட்டை ஒன்றியத்திலுள்ள கோட்டைப்பட்டி கிராமத்திலோ, ஒருவரின் உயிரையே பறித்துவிட்டனர். 

tamilnadu local body election virudhunagar Auctions incident police investigation


சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணை போலீஸ் லிமிட்டில் உள்ளது கோட்டைப்பட்டி கிராமம். இங்கே அதிமுக கிளைச் செயலாளராக இருக்கிறார் ராமசுப்பு. இவர், ஊராட்சி தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, அன்றிரவு (11-ஆம் தேதி) கோட்டைப்பட்டியில் தனது சமுதாய (கவரா நாயுடு) மக்களிடையே ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு ஊர் நாட்டாமையான காங்கிரஸ் கட்சியில் மாவட்ட பொறுப்பில் உள்ள சுப்புராமை அழைக்கவில்லை. காரணம், சுப்புராமும் அதே பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் முடிவில் இருந்ததுதான். ஆனாலும், சமுதாய ரீதியாக நடந்த பொதுவான ஆலோசனைக் கூட்டம் என்பதால், சுப்புராம் தரப்பினரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 


அந்தக் கூட்டத்தில் “நமது சமுதாய மக்கள் அனைவரின் ஒருமித்த ஆதரவும் எனக்கு வேண்டும்..” என்று அதிமுக கிளைச் செயலாளர் ராமசுப்பு பேச, சிவகாசி ஆக்சிஸ் வங்கியின் விற்பனை பிரிவு மேலாளரான சதீஷ்குமார், தனது அண்ணன் சுப்புராமுக்கு ஆதரவாக எதிர்க்குரல் எழுப்பினார். ”சமுதாய மக்கள் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு.. அப்புறம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி ஆதரவு கேட்பது முறையல்ல.”என்று கூற, கூட்டத்தில் சலசலப்பு கிளம்பியது. சதீஷ்குமாரை பேசவிடாமல் சிலர் தடுக்க முற்பட்டபோது “தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு ராமசுப்புவுக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று அவர் கேட்க,  ராமசுப்பு தரப்பில் ஆளாளுக்கு சதீஷ்குமாரை தாக்கியிருக்கின்றனர். ஒருகட்டத்தில் சதீஷ்குமார் பேச்சு மூச்சற்ற நிலையில் சரிந்திருக்கிறார்.  உடனே, அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது. 
 

 

ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் சதீஸ்குமாரின் உடலைக் கைப்பற்றி, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து, அதிமுக கிளைச் செயலாளர்  ராமசுப்பு, அவருடைய சகோதரர் கணேசன், அரசு ஊழியரான செல்வராஜ், முத்துராஜ், ராமசுப்புவின் ஆதரவாளரான சுப்புராம், சுப்புராஜ் ஆகிய ஏழு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.