Skip to main content

காட்டிக் கொடுத்த கண்காணிப்பு கேமரா... நகை கொள்ளையில் மாணவன் உட்பட 4 பேர் கைது!

Published on 14/04/2022 | Edited on 14/04/2022

 

Surveillance camera betrayed ... 4 arrested including student in robbery of kg of jewelery!

 

நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூரின் மெயின் பஜாரில் அலி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை வைத்திருகு்கும் மைதீன்பிச்சை கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி அன்று இரவு தன் நகைக்கடையைப் பூட்டிவிட்டு நகைப்பையுடன் வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது, வேவு பார்த்து பின்தொடர்ந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிவிட்டு 5 கிலோ தங்க நகை மற்றும் 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். 

 

மாவட்டத்தில் நடந்த இந்த அதிகபட்ச கொள்ளைச் சம்பவத்தை நக்கீரன் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். சம்பவம் நிகழ்ந்த இடத்தை காவல்துறை உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்தக் கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடிப்பதற்காக மாவட்ட காவல்துறை எஸ்.பி.யான சரவணன், 6 தனிப்படைகளை ஏ.எஸ்.பி. மாரிராஜன் தலைமையில் அமைத்தார்.

 

தனிப்படையினர், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் நம்பர் பிளேட் இல்லாத கருப்பு நிற பைக்கில் வந்த மூன்று நபர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இருப்பினும், கொள்ளை சம்பவம் நடந்த இடத்தின் செல்போன் டவர் சிக்னல்களையும் ஆராய்ந்தனர். அதில் ஒரு நம்பரிலிருந்து தொடர்ந்து பேசியதும், சம்பவத்திற்குப் பிறகு அந்த நம்பர் சுவிட்ச் ஆஃப் ஆகி பின் இரவு 09.00 மணிக்கு மேல் ஆன் செய்யப்பட்டது தெரியவர, சந்தேகத்திற்குரிய அந்த நம்பர் செல்லுக்குரியவர் பாறையடி காலனியின் சுதாகர் என்பதை விசாரணையில் உறுதிசெய்தனர். இதையடுத்து, அந்த நபரைப் பிடித்து தங்கள் பாணியில் விசாரித்த காவல்துறையினரிடம், அவரும், அவரது கூட்டாளிகளும் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Surveillance camera betrayed ... 4 arrested including student in robbery of kg of jewelery!

அவரது வாக்குமூலம்படி தொடர்ந்து விசாரணை நடத்திய தனிப்படையினர், அதே காலனியைச் சேர்ந்த அழகு சுந்தரம் என்பவர் மூளையாகச் செயல்பட்டு கொள்ளையை நடத்தியது தெரியவந்தது. சுதாகர் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்த தனிப்படையினர், அவர்களிடமிருந்து 2.75 கிலோ நகைகளை கைப்பற்றினர்.

 

கொள்ளை நடத்திய இவர்கள் அங்கிருந்து காருகுறிச்சி வழியாக, திருப்புடை மருதூர் வந்து நகைகளைப் பங்கு போட்டுள்ளனர். தலைமறைவான அழகு சுந்தரத்தை தேடி வருகிறோம் என்கின்றனர் காவல்துறையினர்.

 

"கொள்ளையில் தொடர்புடையவர்கள் அந்த ஏரியாவைச் சேர்ந்தவர்கள் தான். தலைமறைவான அழகு சுந்தரத்திடம் மீதமுள்ள நகைகள் இருப்பதாகப் பிடிபடடவர்கள் தெரிவித்துள்ளனர். அவரை விரைவில் பிடித்துவிடுவோம்" என்றார் மாவட்ட எஸ்.பி.யான சரவணன்.

 

பிடிபட்ட கொள்ளையர்களில் சுதாகர் என்பவர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு மாணவனாம். சம்பவம் நடந்து ஓவர் நைட்டில் கொள்ளைர்கள் பிடிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.