Skip to main content

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்...பக்தர்களுக்குத் தடை!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோவிலின் சூரசம்ஹார விழா நேற்று (09/11/2021) மாலை 04.30 மணிக்கு மேல் 05.30 மணிக்குள்ளாக நடந்தது. கடந்த 4ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. தினமும் சுவாமிக்கு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. 6வது நாளான நேற்று அதிகாலை 01.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 01.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 02.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 09.00 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது.

 

நேற்று மாலை 04.30 மணியளவில் சூரனை வதம் செய்வதற்காக சுவாமி ஜெயந்தி நாதர் ஆலயம் முன்புறமுள்ள கடற்கரையில் எழுந்தருளினார். திருச்செந்தூரில் நடந்த சூரசம்ஹார வதம் உலகப் பிரசித்தி பெற்றதால் வழக்கம் போன்று லட்சக்கணக்கான பக்தர்கள் அதனைக் காணும் வகையில் கடற்கரையில் திரள்வார்கள். ஆனால், இம்முறை கரோனா பரவல் தொற்று காரணமாக விழாவிற்கு பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. விதிப்படி முன்னதாக ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட பக்தர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அதையும் தாண்டி பக்தர்களின் கூட்டம் வந்திருந்தது. இதற்காக விழா நடக்கிற கடற்கரை பகுதியின் அளவு சுருக்கப்பட்டு தகடுகள் தடுப்பு கொண்டு அடைக்கப்பட்டிருந்தது.

 

மாலை 04.30 மணியளவில் அலங்காரத்துடன் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் சூரனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளினார். பன்முக அவதாரத்துடன் வந்த சூரனை இறுதியில் சம்ஹாரம் செய்து அவனை சேவலாகவும் கொடியாகவும் தன்னகத்தே ஏற்றுக்கொண்டார்.

 

இந்த விழாவின் பொருட்டு வழக்கமாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் தடை காரணமாக நிறுத்துப்பட்டன. பக்தர்களைக் கட்டுப்படுத்த போலீசார் பல அடுக்கு பாதுகாப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். முக்கிய அம்சமான இந்த விழாவின் பொருட்டு பாதுகாப்பிற்காக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமாரின் தலைமையில் சுமார் இரண்டாயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.