Skip to main content

அரசு விடுதிகளில் பயிலும் மாணவர்கள் உணவுக்கு பிச்சையெடுக்கும் அவலம்!

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

சென்னையில் உள்ள அரசு கல்லூரிகளில் பயிலும் பெரும்பாண்மையான மாணவர்கள் கிராமபுரங்களில் இருந்து தங்கி பயிலுகின்ற மாணவர்களாகவே உள்ளனர். இந்த மாணவர்கள் சென்னையிலுள்ள எஸ்.சி எஸ்.டி. விடுதியான சைதாப்பேட்டை, நந்தனம், கோடம்பாக்கம், ராயபுரம்,மயிலாப்பூர், வில்லிவாக்கம் என இயங்கிவருகிறது. இந்த அனைத்து விடுதிகளிலும் அரசு விதிபோன்று மெனுவின் படி கொடுப்பதில்லை, காலையில் டீ, காப்பி, இட்லி, தோசை, மாலையில் சுண்டல், தொடங்கி எதுவுமே மாணவர்களுக்கு முறையாக உணவு கிடைப்பதில்லை, மூன்று வேலையும் ஒரே வகையான சாப்பாடு தான் அதுவும் கல்லும், புழுவுமாய் உள்ளது. அதற்கு மேலாக ஒரு படி போய்  சாம்பார், சாப்பாடு வடிக்கின்ற கஞ்சி தண்ணீரில்தான் சாம்பாரே செய்யப்படுகிறது.

 

oo


இந்த சூழ்நிலையில் மாணவர்கள் கடைகளில் உள்ள சாம்பாரை ஒரு பாக்கெட் 20 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி உணவு சாப்பிடும் நிலையில்தான் உள்ளது. அதைவிட கேவளமான நிலையிலும் மாணவர்கள் உணவை பிச்சை எடுத்து சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. "கற்கை நன்றே கற்கை நன்றே... பிச்சை புகினும் கற்கே நன்றே" என்பதை போன்று மாணவர்கள் தெருவில் நின்று கொண்டு யாராவது சாப்பாடு கொடுக்க மாட்டராகளா என்பதை போன்று பிச்சையாக உணவை பெரும்நிலைக்கு இந்த அரசு கொண்டு சென்றுள்ளது.

இந்த விடுதிகளில் உள்ள அரசி பரப்புகரளை விற்பனைக்களுக்காக திருவள்ளுரிலுள்ள குடோனில் அடைத்துவைத்து ஒட்டுமொத்தமாக ஆந்தராவிற்கு விற்பனை செய்யப்படுகின்றனர். இதற்கு உடந்தையாக ஆதி திராவிடர் அமைச்சர் பி ஏ தான் இதன் ஆணிவேராக இருந்து வருகிறார். 

 

student problem



இது தொடர்பாக பேசிய கோடம்பாக்கம் மாணவர்கள், தினமும் கடைகளில் வாங்கிவந்துதான் சாப்பிடுகிறோம் என்ன செய்யவது சார், காலம் காலமாக எங்களுக்கு இதே நிலைதான் நாங்கள் மெனுபடி சாப்பாடு வழங்கு என்று போராட்டம் செய்தால், போராட்டம் செய்கின்ற நாள் மட்டும்தான் பொங்கலோ, புளீயோதரையோ கொடுகிறார்கள் திரும்பவும் அதே நிலைக்கு சென்று விடுவார்கள். நாங்கள் படிக்கவா அல்லது தினதோறும் இவர்களோ போராடவா என்ற கேள்வி முன்வைத்தார்.

 

student problem



அவர்களின் கேள்வியும் நியாயமாகவே இருந்தது. இதன் தொடர்பாக விடுதி வார்டன்களிடம் கேட்ட போது "சார் எங்களை எல்லாம் கேட்காதிங்க போய் அமைச்சரையும், இயக்குனரையும் கேளுங்கள் அவர்கள்தான் இப்படி போட சொல்லுறாங்க சார் நீங்க என்ன செய்தி வேண்டுமானாலும் போட்டுகோங்க எங்களை ஒன்றுமே செய்யமுடியாது. அத்தனை பேரும் திருடர்கள் தான்" என்றார்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; சுகாதாரத்துறை விசாரணை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Youth sacrifice during treatment Health investigation

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 24 ஆம் தேதி (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்திருந்தார். அப்போது மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் தீர்த்தலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Next Story

2024 ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
2024 Vck Awards Announcement!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமையினருக்கு, “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு  இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக - விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அம்பேத்கர் சுடர் விருது - நடிகர் பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி விருது - வழக்கறிஞரும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளருமான அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காமராசர் கதிர் விருது - இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது - பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருது - வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர்  எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது - கல்வெட்டியலறிஞர் எ. சுப்பராயலுவுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா மே 25 ஆம் தேதி (25.05.2024) சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ளார்.