Published on 17/12/2020 | Edited on 17/12/2020
![Struggle in Trichy against the Agriculture Bill!](http://image.nakkheeran.in/cdn/farfuture/u2xCNIYgNGq__O2o8bOgYu7XSU_PUPU2AfpRJldp5Rg/1608206463/sites/default/files/inline-images/xgfhtr7tu.jpg)
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், தமிழகத்திலும் விவசாயிகளின் போராட்டம் வலுப்பெற ஆரம்பித்துள்ளது.
![Struggle in Trichy against the Agriculture Bill!](http://image.nakkheeran.in/cdn/farfuture/q3wqdKpj0qvkamY1ybrMQCWAAdqEXv4GV5pKUkVenH0/1608209580/sites/default/files/inline-images/dregre6y4.jpg)
அதன் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கு ஆதரவாக, திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில், மயிலாடுதுறையில் இருந்து கோவை செல்லும் ஜனசதாப்தி ரயிலை மறித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஜனசதாப்தி விரைவு ரயில் 15 நிமிடம் கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட பிறகு புறப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.