Skip to main content

மீட்கப்பட்ட ராஜராஜன் சிலைக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை: பொதுமக்கள் தரிசிக்க ஏற்பாடு

Published on 01/06/2018 | Edited on 01/06/2018
Chidambaram


 

தஞ்சை பெரியகோயிலில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் ராஜராஜன் சிலை, அவரது பட்டத்து இளவரசி லோகமாதேவி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது. தற்போது இதன் மதிப்பு ரூபாய் 150 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. பின்னர் சிலை கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக கடந்த 3 மாதத்திற்கு முன்பு கொடுத்த புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல், உதவி கண்காணிப்பாளர்கள் ராஜாராம், அசோக் நடராஜன் உள்ளிட்ட சிலைதடுப்பு போலீசார்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
 

 பின்னர் சிலைகள் குஜராத் தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளதை உறுதிபடுத்திய போலீசார் சிலைகளை கைப்பற்றி சென்னைக்கு வியாழன் அன்று எடுத்து வந்தனர். வெள்ளியன்று சென்னையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் வழியில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சிலைகளை எடுத்து வந்தனர். சிலைகள் வருவதை அறிந்த இந்து அமைப்பின் மாவட்ட செயலாளர் குருவாயூரப்பன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெயதீசன், வர்த்தக சங்க செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட சிதம்பரம் நகர பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோவிலில் குவிந்தனர்.

 

Chidambaram


 

பின்னர் சிலைகளுக்கு வெடிவெடித்து வரவேற்பு அளித்தனர். இதனைதொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கும்பமரியாதை கொடுத்து வரவேற்று சிலைகளை நடராஜர் கோயிலின் கருவரையில் நடராஜர் சிலைக்கு எதிரே நிற்க வைத்து பூஜைகள் செய்தனர். பின்னர் கோயிலின் தேவசபையில் சிறிது நேரம் பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர். இதனை தொடர்ந்து சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த எடுத்து சென்றனர்.
 

இதுகுறித்து சிலைகடத்தல் தடுப்பு பிரிவு உதவி கண்காணிப்பாளர்கள் ராஜாராம், அசோக்நடராஜன் செய்திளார்களிடம் பேசுகையில், ராஜராஜன் சோழன் வாழ்ந்த காலத்தில் 66க்கும் மேற்பட்ட பஞ்லோக சிலைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் ராஜராஜன்சோழன் உள்ளிட்ட 20 மேற்பட்ட சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது பல ஆயிரம் கோடிகள் மதிப்புடையது.  தற்போது 2 சிலைகளை கைபற்றியுள்ளோம். மீதமுள்ள சிலைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் ராஜராஜனுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. அதனால் இந்த வழியாக செல்லும் போது நடராஜரை தரிசிக்க கோயிலுக்கு சிலைகளை எடுத்து வந்தோம். இதனை நீதிமன்றத்தில் சமர்பித்த பின்னர் ஆணைபெற்று தஞ்சை பெரிய கோயிலில் வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்படும் என்றார்கள்.

 

Chidambaram


இதுகுறித்து முன்னாள் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சாமிநாதன் கூறுகையில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மாணிக்கவாசகர் பாட நடராஜர் கைபட எழுதிய ஓலைச்சுவடி சிதம்பரம் நடராஜர் கோயிலின் கருவறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. இதனை கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் பாண்டிச்சேரி அம்பலத்தாடி மடத்தெருவில் உள்ள அருங்காட்சியகத்தில் வெள்ளி பேழையில் பாதுகாத்து வைத்துள்ளனர். இதனை கைப்பற்றி சிதம்பரம் கோயிலில் வைக்கவேண்டும்.  மேலும் பல கோடிகள் மதிப்புடைய நடராஜர், மாணிக்கவாசகர் பஞ்லோக சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி சிலைகளை மீட்டு கோயிலுக்கு எடுத்துவரவேண்டும் என்று கூறினார். ஓலைச்சுவடிகள்,சிலைகள் திருட்டுக்கு அப்போதைய கோயில் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளது. எனவே தீவிர விசாரணை நடத்தவேண்டும் என்றார்.
 

இதுகுறித்து சிலைதடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேலுவிடம் கேட்டபோது சம்பந்தபட்ட வழக்கை பற்றி மட்டும் கேளுங்கள் என பதில் கூற மறுத்துவிட்டார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.