Skip to main content

10 ஆம் வகுப்பு தேர்வில் ஆப்சென்ட் ஆன 25 ஆயிரம் மாணவர்கள்

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

 sslc public practical exam students absent issue
மாதிரி படம்

 

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல் மார்ச் 14 ஆம் தேதி பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. 3,225 மையங்களில் இந்த பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.

 

இதற்கிடையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வை பள்ளி மாணவர்கள் 49,559 பேரும், தனித்தேர்வர்கள் 1,115 பேரும் எழுத வரவில்லை எனப் பள்ளிக்கல்வித்துறை கூறியிருந்த நிலையில் தேர்வு எழுதாதவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு உரிய ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கப்பட்டு துணைத் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.

 

இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கிய 10ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 25 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளன. இதனால் கடந்த 28 ஆம் தேதி உடன் முடிய வேண்டிய செய்முறைத் தேர்வானது நாளை (31.03.2023) வரை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ளாத மாணவர்கள் நீட்டிக்கப்பட்ட நாளில் நடக்கும் தேர்வில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

‘10 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு’ - பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Attention Class 10 Students School Education Department Important Order

சிறுபான்மை மொழியினருக்குத் தமிழ்த் தேர்விலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறுபான்மை மொழியினைத் தாய்மொழியாக கொண்டோருக்கு 2023 - 24 ஆம் கல்வியாண்டில் கட்டாய தமிழ்த் தேர்வில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் சிறுபான்மை மொழியினை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் தங்களது தாய்மொழிப் பாடத்தினை எழுதினால் போதும் எனவும், கட்டாய தமிழ்த் தேர்வை எழுத வேண்டியதில்லை எனவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.