Skip to main content

17வயது சிறுமியை மீட்ட சமூக நலத்துறை அதிகாரிகள்

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

Social welfare officials rescue a 17-year-old girl

 

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவிக்கு வயலூர் முருகன் கோவிலில் இன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், இன்று காலை திருமண நிகழ்வு நடைபெறுவதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு சென்ற அதிகாரிகள் 17 வயது சிறுமியை மீட்டு மணமகன் வசந்த்(21) என்பவரையும் அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்களை அழைத்து சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்