Skip to main content

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கைது

Published on 24/08/2024 | Edited on 24/08/2024
Six-year-old girl  assaulted; puratchi bharatham Party executive arrested

சென்னையில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் தந்தையும், புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகியுமான ரவி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் தலையில் அடிபட்டதாக எழும்பூர் மருத்துவமனை சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மருத்துவர்கள் சிறுமியை முழு பரிசோதனை செய்தபோது சிறுமியின் பாலின உறுப்பில் காயம் இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக சிறுமியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது அவருடைய தந்தையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. உடனடியாக அவருடைய தந்தை தந்தையும் புரட்சி பாரத கட்சியின் (புதுச்சேரி) மாவட்ட தலைவரான ரவியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதலில் ரவி மறுப்பு தெரிவித்த நிலையில் போலீசார் கஸ்டடியில் எடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார். சிறுமியின் தாய் அங்கன்வாடி பணியாளர் என்பதும், ரவியின் இரண்டாவது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்