Skip to main content

சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக மாணவிக்கு பாலியல் அத்துமீறல்... நடன இயக்குனர் கைது

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த முளகுமோடு பகுதியில் தீபம் தியேட்டர்ஸ் என்ற பெயரில் நடன குழு நடத்தி வருபவர் ஜான் பிலிப்போஸ். இவரது நடனக் குழுவில் நடன இயக்குனராக உள்ள அபி அஜித்குமார் என்பவர் தான் மேடை நடன நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை செய்து வந்துள்ளார்.

 

cinema cheating

 

இந்த நிலையில் நடனத்தின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ஏழை மாணவி ஒருவர் இந்த குழுவிற்கு சென்றுள்ளார். மாணவியின் நடனத்தை ரசித்த அபி அஜித்குமார் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கூறியுள்ளான்.

cinema cheating

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி இந்த நடனப் பள்ளிக்கு சென்ற மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பல விசாரணைகளுக்கு பிறகும் அந்த மாணவி என்ன ஆனார் எங்கு போனார் என்பது தெரியாத ஒன்றாகவே இருந்தது.  இந்நிலையில் காவல் ஆய்வாளர் இசக்கி என்பவர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் ராஜபாளையத்தில் நடைபெற்ற ஒரு கோயில் விழாவில் நடன நிகழ்ச்சி ஒன்றில் இருந்த நடன இயக்குனர் அபி அஜித்தை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். அதேபோல் மாணவியை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

cinema cheating

 

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவித்தார் அந்த மாணவி...  

 

சினிமா இயக்குனர் ஒருவர் திருச்செந்தூர் வந்திருப்பதாகவும் அவர் கதாநாயகி தேர்வில் ஈடுபட்டுள்ளார் என்றும் ஆசை வார்த்தை கூறி கடந்த ஆண்டு அஜித் குமார் மாணவியை அழைத்து சென்றுள்ளான். ஆனால் திருச்செந்தூர் செல்லாமல் அஜித்குமார் காயல்பட்டினத்தில் உள்ள ஒரு நண்பரை அவரது வீட்டில் சினிமா இயக்குனர் என்று அறிமுகம் செய்து வைத்து மாணவியை நிர்பந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இப்படியே சினிமாக்காரர்கள் என பொய்யான தகவல்களை கூறி மாணவியிடம் பலர் தவறாக நடந்து கொண்டுள்ளனர். 

 

cinema cheating

 

தொடர்ந்து மாணவி காவல் துறையில் புகார் அளித்து விடக்கூடாது என்பதற்காக மாணவியை அபிஅஜித்  திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னுடனே வைத்துக் கொண்டு ஊர் ஊராக மேடை நடனங்களில் ஆட வைத்து பிழைப்பு நடத்தி வந்ததாக மாணவி காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

இதனையடுத்து மேடை நடன இயக்குனராக அபி அஜீத்தை கைது செய்த காவல்துறையினர் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.