Skip to main content

அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு;நாளை மாலை வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்- வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை!!

Published on 29/09/2018 | Edited on 29/09/2018

 

rain

 

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்,

வளிமண்டல மேலடுக்கில் இலங்கை முதல் வடக்கு கர்நாடகம் வரை சுழற்சி நிலவுவதால் இன்னும் 24  மணி நேரத்தில் தென் தமிழக பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும். வங்கக்கடலில் சீற்றம் நிலவுவதால் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவே நாளை (செப்டெம்பர் 30) மாலை வரை மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம். வடகிழக்கு பருவமழை நடப்பு ஆண்டை விட 12 சதவிகிதம் கூடுத்தலாக இருக்கும் எனவும் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கனமழை எதிரொலி; நிரம்ப காத்திருக்கும் பவானிசாகர்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
 Heavy rain echoes; Bhavanisagar waiting to be filled

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,781 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று காலை முதல் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 7,781 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 60.24 அடியாக உயர்ந்துள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.96 அடியாக உள்ளது. அதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.57 அடியாக உயர்ந்துள்ளது.

Next Story

‘12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் தகவல்! 

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Chance of rain in 12 districts Meteorological Dept informs

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (27.06.2024) வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், சென்னை,  செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய இரு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (27.06.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.