Skip to main content

ஸ்டாலின், நக்கீரன் ஆசிரியர் மீது புகார் செய்துள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஞானமூர்த்தி

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

 

செந்துறை (வடக்கு) திமுக ஒன்றிய செயலாளர் மு.ஞானமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

செந்துறை அண்ணாசிலை முன்பு இன்று (15-3-2019) வெள்ளி காலை 10.00 மணிக்கு அனைத்து கட்சியினரின் கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது.

 

stalin-nakkheeran gopal-mg 01


இந்திய தேசிய மக்களுக்கு அதிர்ச்சியும் தமிழ்நாட்டு மக்களுக்கு தலைகுனிவும் ஏற்படுத்திய பொள்ளாச்சி வண்கொடுமையாளர்களை பாதுகாக்கும் நோக்கோடும் நீதிகேட்டு தன் எழுச்சியோடு போராடும் தமிழக மாணவிகள், மாணவர்கள், பொது மக்களை அச்சுறுத்தும் நோக்கோடும் தி.மு.க. தலைவர் குடும்பத்தினர் மீதும், தமிழில் வெளிவரும், சமூக அரசியல் விழிப்புணர்வு வார இதழ் நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்கள் மீதும் புகார் செய்துள்ள தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்