Skip to main content

பாமக வெற்றிபெரும் என்று சொன்னதைக் கேட்டேன்: இன்று இரவு நல்லபடியாக தூங்கப் போகிறேன்! டாக்டர் ராமதாஸ் பேச்சு!!

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை அதிமுக கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் பாமக வேட்பாளரான ஜோதி முத்து போட்டியிடுகிறார். அதன் அடிப்படையில் அதிமுக கூட்டணி  கட்சி சார்பில் திண்டுக்கல்லில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார்.

 

pmk Founder ramadoss election campagin  in dindugul

 

இக்கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை தாங்கினார். அதுபோல் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன். இன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டனர்.

 

இக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்சோ.....

 

 

இங்குள்ள முன்னாள் மேயர் பேசும்போது முதல்வரும், துணை முதல்வரும் பாமகவுக்கு வடக்கே செல்வாக்கு இருக்கிறது. தெற்கே  பாமகவுக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த திண்டுக்கல் தொகுதியை ஒதுக்கி இருக்கிறார்கள் என்று சொன்னார். ஆனால் முதல்வரும், துணை முதல்வரும் சென்னார்களோ இல்லையோ அதற்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ராமதாஸ் சொல்லி முடிப்பதற்குள் மேடையில் ராமதாஸின் அருகே உட்கார்ந்திருந்த அமைச்சர் சீனிவாசன் முதல்வரும், துணை முதல்வரும் அப்படித்தான் சொல்லி இருக்கிறார்கள் என்று வெளிப்படையாக சொன்னதைக் கேட்ட ராமதாசும் அதற்கு நன்றி சொன்னார்.

 

அதன் பின் மீண்டும் பேசிய ராமதாஸ்சோ... திண்டுக்கல் தொகுதியில் பாமக நிற்குமோ என  சிலர் நினைத்தார்கள். இன்றைக்கு நீங்கள் எல்லாம் வேறு மாதிரியாக பேசி இருக்கிறதை பார்க்கும்போது ஒரு லட்சம் இரண்டு லட்சம் இல்லை 3 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறோம் என்று சொன்னதைக் கேட்கவும் தான் இன்று இரவு  நல்லபடியாக நான் தூங்கப் போகிறேன். இதை உடனே அன்புமணிக்கும், ஜிகே மணிக்கு தெரியப்படுத்துவேன். இது மூலம் பாண்டிச்சேரி உள்பட ஏழு தொகுதிகளிலும் பாமக வெற்றி பெறும் அதோடு பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சி வெற்றிபெறும். அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எல்லாம் உண்மையாக உழைப்பவர்கள். அவர்களிடம்  சூதுவாது எல்லாம் கிடையாது. ஆனால் மற்ற கூட்டணிக் கட்சிகள் மாலை போட்டு விட்டு கழுத்து அறுத்துவிடுவார்கள்.

 

 

முதன்முதலில் ஜெ.வுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றோம் அதுபோல் தற்போது மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து அதன் மூலம் இந்த மெகா கூட்டணி அனைத்து தொகுதிகளிலும்  வெற்றி பெறும்  விவசாய குடும்பத்தில் பிறந்த ஜோதி முத்துவை வேட்பாளராக இறக்கியிருக்கிறோம். இந்த திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை அப்படிப்பட்ட இந்த கோட்டையை யாரும் ஓட்டை போட முடியாது அந்த  அளவுக்கு கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள். அதில்  பாமகவுக்கு மாங்கனி சின்னம் என்றாலும் அந்த மாங்கனியின் இரண்டு பக்கமுமே இலை இருக்கிறது என்று மக்களிடம் சொல்லுங்கள். நான் அதிமுகவில் கூட்டணி வைத்தைக் கண்டு ஸ்டாலின் முதன் முதலில் வசைபாட ஆரம்பித்துவிட்டார். 

 

 

pmk Founder ramadoss election campagin  in dindugul

 

 

அங்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லை கலைஞருக்குப் பிறகு இனிமேல் அந்த கட்சி தேராது. தற்பொழுது அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இந்த அரசு மேல் கோபமாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். உங்களுடைய கோரிக்கைகளையும், குறைகளையும் தேர்தல் முடிந்தவுடன் நானே முதல்வரிடமும், துணை முதல்வருடன் பேசி நிறைவேற்றிக் கொடுக்கிறேன் என்று கூறினார்.

 

 

இக்கூட்டத்தில் பாமக மாநில பொருளாளர் திலகபாமா மற்றும் மாவட்ட தலைவர் பரசராமன் உள்பட மாநில பொறுப்பாளர்கள் சிலர் வந்திருந்தனர் அதுபோல் கூட்டணி கட்சியில் உள்ள தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, கிழக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்பட கூட்டணி கட்சி பொறுப்பாளர்களும் அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

 

 

இக்கூட்டத்திற்கு கட்சிக்கார்களோடு பொதுமக்களை டோக்கன் அடிப்படையிலும் அழைத்து வந்து இருந்தனர். ஆனால் ஆரம்பத்தில் இருந்த கூட்டம் நேரம் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசும்போது பொது மக்களின் கூட்டமும் குறைந்து பெரும்பாலான  இருக்கைகள் வெறிச்சோடிதான் காணப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.