Skip to main content

விடுபட்ட குழந்தைகளின் வீட்டிற்கு சென்று போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டம்...

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

Plan to go home to missing children and give polio drops ...

 

தமிழகத்தில் பொதுவாக ஜனவரி 16ஆம் தேதி கொடுக்கப்படும் போலியோ சொட்டு மருந்து, இந்த வருடம் அதே நாளில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதால், போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை ஜனவரி 31ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது.

 

தமிழகத்தில் மருத்துவமனைகள், அங்கன்வாடிகள் உள்ளிட்ட 43 ஆயிரத்து 51 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அதில் 31ஆம் தேதியான நேற்று 5 வயதிற்கு உட்பட்ட 70 லட்சத்து 26 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து என இலக்கு திட்டமிட்டிருந்த நிலையில், 65 லட்சத்து 3 ஆயிரம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. தற்போது விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு வீடாக சென்று சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு’ - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Attention of parents of children under 5 years of age TN Govt

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3 ஆம் தேதி (03.03.2024) ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாகச் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்படும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் (03.03.2024) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவுவது மற்றும் கிருமி நாசினியான சானிடைசர் உபயோகப்படுத்துவது கட்டாயமாகும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3000க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும். போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் குழுக்கள் மூலமாகத் தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Attention of parents of children under 5 years of age TN Govt

போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு தொடர்ந்து 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளவும். குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தொடங்கியது போலியோ சொட்டு மருந்து முகாம்!

Published on 27/02/2022 | Edited on 27/02/2022

 

Started polio vaccination camp

 

தமிழகத்தில் 43,500 மையங்களில் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தற்போது தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 5 மணி வரை செயல்பட இருக்கிறது. 5 வயதுக்குட்பட்ட 57.65 லட்சம் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,647 முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தரப்பட உள்ளது.

 

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள், பிரச்சனைகள் இருந்தால் அடுத்த நாளில் சொட்டு மருந்து தரலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் 453 மையங்களில் 86,801 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது.