Skip to main content

மயிலாடுதுறை அருகே ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு எரிவாயு கசிவு

Published on 13/08/2017 | Edited on 13/08/2017
மயிலாடுதுறை அருகே ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு எரிவாயு கசிவு

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி ஓ.என்.ஜி.சி. எண்ணை குழாயில் உடைப்பு ஏற்பட்டு எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள மாதிரிமங்கலம் எம்.ஜி.ஆர். நகரில் ஓ.என்.ஜி.சி. குழாயில் இன்று காலை 5 மணியளவில் உடைப்பு ஏற்பட்டு எரிவாயு கசிவு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று உள்ளனர். மாதிரி மங்கலம் வழியாக செல்லும் ஓ.என்.ஜி.சி.குழாயை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மாதிரிமங்கலம் வழியாக செல்லும் குழாயில் 4-வது முறையாக உடைப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

அதிகாரிகளிடம் புகார்கள் அளிக்கப்பட்டு எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.  

சார்ந்த செய்திகள்