Skip to main content

புதிய தலைமைச்செயலக வழக்கு -திமுக தரப்பு வாதங்களை நிறைவு பெறுமா?

Published on 03/08/2018 | Edited on 03/08/2018
new

 

சென்னை ஓமந்துரார் புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்தாக கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி நீதிபதி ரகுபதி ஆணையம் அமைக்கப்பட்டது.

 

இந்நிலையில் இந்த விசாரணை ஆணையம் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி, முன்னாள் துணை முதல்வரான மு.க.ஸ்டாலின், பொதுப் பணித்துறை அமைச்சார் துரைமுருகன் ஆகியோருக்கு சம்மன் 2015ஆம் ஆண்டு அனுப்பியது.ஆணையம் அமைக்கப்பட்டப உத்தரவை ரத்து செய்யவும், தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யவும், ஆணைய நடைமுறைகளை எதிர்த்தும் மூவரும் வழக்கு தொடர்ந்தனர்.

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கும், விளக்கமளிக்க கோரிய சம்மனுக்கு 2015ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.


இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில்  வழக்கறிஞர் நீலகண்டன் ஆஜராகினார், மனுதாரரான திமுக தலைவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் விளக்கம் பெற வேண்டும். ஆதலால், வழக்கை திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும். தடையை நீக்க கோரும் கூடுதல் மனு மீது மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து மெமோ தாக்கல் செய்தார். 

 

அதன் பின்னர் கூடுதல் மனுவை மட்டும் விசாரிப்பதாக ஏற்றுக்கொண்ட நீதிபதி, திங்கட்கிழமை  ஒத்திவைக்க மறுத்துவிட்டார். மேலும், மனுதாரர் கருணாநிதி உடல்நிலை சரியில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அவர் நன்கு குணமடைய வேண்டும் என்று அனைவரும் பிராத்தனை செய்கிறோம். அதே நேரத்தில் வழக்கை எத்தனை ஆண்டுகள்தான் தேவை இல்லாமல் நினைவில் வைத்திருப்பது. மக்களின் பணம் வீணடிக்கக் கூடாது என்ற அக்கரையில் தான் இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் நினைக்கிறது என  நீதிபதி தெரிவித்தார்.

 

 அதன்பின்னர் நாளை அகஸ்ட் 3ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளி வைத்த நீதிபதி . தடையை நீக்கக்கோரி ஆணையம் தரப்பில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்தப்படும், அரசுத் தரப்பு வாதங்களை முடித்த பிறகு, நாளையே திமுக தரப்பில் வாதங்களை முடிக்கவில்லை என்றாலும் இடைக்கால மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் . நாளை விசாரணை நடக்கும்,  யார் வந்தாலும் வராவிட்டாலும் நீதிமன்றம் சட்டப்படியான கடைமையை செய்யும் என நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் அறிவித்தன் பின்னணி

Published on 09/01/2019 | Edited on 09/01/2019
kallakurichi district



அதிமுகவில் கோஷ்டி பூசல் காரணமாக மாவட்டத்தை பிரிக்க கோரிக்கை எழுவதாக நக்கீரனில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அதில் முக்கியமானது காஞ்சிபுரம் மாவட்டம். காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டாக பிரிப்பதாக இருந்தது. 

 

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் சி.வி.சண்முகம், குமரகுரு ஆகிய இரண்டு பேர் உள்ளார்கள். உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுருவுடன், எடப்பாடி பழனிசாமி குடும்பம் தனிப்பட்ட முறையில் நட்பு வைத்துள்ளது.

 

குமரகுருவை மாவட்டச் செயலாளராக கொண்டுவர வேண்டும், அதே நேரத்தில் மணலை கையில் வைத்திருக்கும் சி.வி.சண்முகத்தை எடப்பாடிக்கு அடங்கி போக மாட்டேங்குறார். ஓ.பி.எஸ். சொல்வதையெல்லாம் கேட்கிறார் என்பதால் அவரை அடக்க வேண்டும் என்பதற்காக கள்ளக்குறிச்சியை புதிய மாவட்டமாக அறிவித்திருகிறார் எடப்பாடி பழனிசாமி. 

 

 

 

 


 

Next Story

புதிய சேனல்! ஸ்டாலின் - ரஜினி போட்டா போட்டி! காங்கிரஸ் - பாஜகவும் களத்தில்!

Published on 22/12/2018 | Edited on 22/12/2018
stalin-rajini




ரஜினியின் ரசிகர் மன்றம் சார்பில் ஒரு டிவி ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் தொடங்கியுள்ளன. ரஜினியின் ஆசியுடன் தொடங்கப்பட்ட அந்த முயற்சியின் எதிரொலியாக ரஜினி என்ற பெயரையே ஒரு வியாபார முத்திரையாக மாற்ற ரஜினி முடிவு செய்துள்ளார்.

 

இதேபோல் ஸ்டாலினும் தனது பெயரில் ஒரு டிவியை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக புதிய செய்தி ஆசிரியர் குழுவை உருவாக்கியுள்ளார். அந்தக் குழு ஸ்டாலின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை செய்து வருகிறது.

 

இப்பொழுது ரஜினி, ஸ்டாலின் வழியில் தேசிய அரசியல் கட்சிகளும், சேனல் ஆரம்பிப்பதில் போட்டிபோடுகின்றன. இப்பொழுது இருக்கும் தேசிய சேனல்களில் பல பாஜகவுக்கு ஆதவாக இருந்தாலும், பாஜகவுக்கென ஒரு சேனல் வேண்டும் என பாஜக ஒரு சேனலை ஆரம்பிக்கிறது. 

 

தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியும் என்.டி.டி.வியில் தலைமை செய்தி ஆசிரியராக இருந்த பர்கா தத்து அவர்களை தலைவராக கொண்டு ஒரு சேனலை ஆரம்பிக்கிறது. 

 

இந்தியாவில் ஒரு டிவி சேனலை ஆரம்பிப்பதற்கு 150 கோடி ரூபாய் செலவாகும். 150 கோடி ரூபாயும், ஒரு செய்தியாளர் குழுவும் அமைத்துவிட்டால், யார் வேண்டுமானாலும் சேனலை ஆரம்பித்துவிடலாம். இதனால் புற்றீசல் போல சேனல்கள் பெருகி வருகிறது. அந்த வரிசையில் ரஜினியின் சேனலும், ஸ்டாலினின் சேனலும் இடம் பெறுகிறது.