Skip to main content

முதல்வராக வந்த முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்... ஆர்வத்தோடு வரவேற்ற திருவாரூர் மக்கள்!

Published on 07/07/2021 | Edited on 07/07/2021

 

Muthuvelar Karunanidhi Stalin, who came first; People of Thiruvarur welcome with enthusiasm!

 

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பேறுகால மகப்பேறு மற்றும் சிசு தீவிர சிகிச்சை மையத்தைத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

 

தமிழ்நாடு முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், முதல் அரசு முறை பயணமாக அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்திற்கு நேற்று (06.07.2021) மாலை வந்தார். திருச்சியிலிருந்து மன்னார்குடி வழியாக வந்தவர், மாவட்ட எல்லையான வடுவூரில் செயல்பட்டுவரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வுசெய்து, அங்கிருந்த ஊழியர்களிடம் முறைகேடுகள் கலையப்பட வேண்டும் என கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து, அவரது பாட்டியாரும், கலைஞரின் தாயாருமான அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்திற்கு குடும்பத்தினரோடு சென்று மரியாதை செய்தார்.

 

Muthuvelar Karunanidhi Stalin, who came first; People of Thiruvarur welcome with enthusiasm!

 

அங்கிருந்து சன்னதி தெருவிற்கு வரும் வழியெங்கும் பொதுமக்கள் மனுக்களைக் கொடுக்க, காரில் இருந்தபடியே ஆர்வமாக மனுக்களை வாங்கிச் சென்றார். இரவு அங்கு தங்கியவர். இன்று காலை சன்னதி தெருவிலிருந்து புறப்பட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 250 படுக்கை வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருந்த மகப்பேறு மற்றும் சிசு தீவிர சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார்.

 

Muthuvelar Karunanidhi Stalin, who came first; People of Thiruvarur welcome with enthusiasm!

 

கரோனா தடுப்பூசியைத் தொடர்ந்து போட செய்ததற்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. திமுக மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் முதல்வருக்கு வெள்ளி செங்கோல் வழங்கினார். பிறகு கட்டடத்தில் உள்ள வசதிகள் குறித்து முதல்வர் நேரில் ஆய்வுசெய்துவிட்டு, கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளைக்குச் சென்றுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.