Skip to main content

போனமுறை 40,000 கோடி, இந்தமுறை 5,000 கோடி பிரதமரின் தமிழ்நாடு வருகை!!!

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

இன்று தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் நடபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார்.
 

modi



இதில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பங்குபெறுகிறார்கள். இந்த கூட்டத்தில் 5,010 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலுள்ள 2 வழிச்சாலைகளையும், திருப்பூர் மாவட்டத்தில் 32 கி.மீ. தூரமுள்ள 4 வழிச்சாலையையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைக்கிறார். 
 

சென்றமுறை கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி 40,000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்