Skip to main content

’ கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொறியத்துவங்கிவிட்டார்கள்’; மக்கள் அதிகாரம் காளியப்பன் சாடல்

Published on 24/05/2019 | Edited on 24/05/2019

 

"கொள்ளிக் கட்டையை எடுத்து தலையைச் சொறியத் தொடங்கிவிட்டார்கள் வட இந்திய வாக்காளர்கள். கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு ஏற்படுத்திய நாசத்திலிருந்து விடுபட முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் மக்கள் மோடிக்கு மீண்டும் அதிகாரத்தை எப்படி கொடுத்தார்கள் என்பதற்கான காரணங்கள் மிகவும் ஆபத்தானவை."என்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளரும், எழுத்தாளருமான காளியப்பன்.

 

அவர் மேலும்," பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பொருளாதாரத் தாக்குதலைக் காட்டிலும் இந்த நாட்டின் பன்முகத்தன்மை, மதசார்பின்மை, கருத்துச்சுதந்திரம், சிறுபான்மையினர், தலித் மக்களின் உரிமைகள் மீதான தாக்குதல்கள், படுகொலைகள் ஆகியவற்றிற்குப் பிறகும் மோடிக்கு முன்னைவிட அதிக இடங்கள் கிடைத்திருக்கின்றன என்றால் வட இந்திய சமூகம் மொத்தமும் ஜனநாயக உணர்வை இழந்து சாதிவெறி, மதவெறி,போலி தேசவெறி, முடைநாற்றம் வீசும் மூடத்தனங்கள், பிற்போக்குத்தனங்கள் ஆகியவற்றில்  மூழ்கிக்கிடப்பது முக்கியமான காரணம் என்பது மறுக்க முடியாதது. 

 

k


 
இதற்கு நேர் மாறாக கர்நாடகம் தவிர்த்த தென்னிந்தியா, அதிலும் குறிப்பாகத் தமிழகமும் கேரளமும் பாஜகவை அவமானகரமான முறையில் விரட்டியடித்திருக்கின்றன. தற்போது பாஜக பெற்றிருக்கும் மிருக பலம் ஏற்படுத்தப்போகும் அழிவுகள் மிகக் கொடியனவாக இருக்கப் போகின்றன. சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர்கள், தலித்துகள் ஆர்.எஸ்.எஸ் கும்பலின்பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாவார்கள். உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக செயல்படுவோரை தேச விரோதிகளாகச் சித்தரித்து பேராசிரியர் சாய்பாபா, கவிஞர் வரவர ராவ் போன்றோரை சிறையில் தள்ளியிருக்கும் மோடி அரசு, தேச விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டங்களை மிகக்கடுமையாக்கப் போவதாக தேர்தலுக்கு முன்பே அறிவித்து விட்டது. 

 

கடந்த அய்ந்தாண்டுகளில் அதிகார வர்க்கம், நீதிதுறையை பெருமளவு ஆர் எஸ் எஸ் மயமாக்கி, பாசிசத்திற்கு அடித்தளமிட்டுவிட்டது மோடி அரசு. எனவே பாசிச ஒடுக்கு முறையை ஏவ பாஜக முன்னரே தயாராகி விட்டது. முன்னாள் நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த பனகாரிகா, வரப்போகும் அரசு தற்போது இருக்கும் அரசு துறைகள் அனைத்தையும் தனியார் மயமாக்க வேண்டும் என எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றி இருக்கிறார். 


 
உலகம் முழுவதும் முதலாளித்துவம் சந்தித்து வரும் நெருக்கடிகளின் தாக்கம் இந்தியாவில் மேலும் அதிகரிக்கவே செய்யும். விவசாயம், சிறு தொழில், சிறு வணிகம் இவற்றின் நசிவு, வேலையின்மை ஆகியவற்றால் ஏற்படப்போகும் சமூகக் கொந்தளிப்பை மோடி அரசு பாசிச அடக்குமுறையின் மூலம் மட்டுமே எதிர்கொள்ளும்.   இந்த நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயக பூர்வமான தேர்தலுமல்ல, ஜனநாயகத்திற்கான தேர்தலுமல்ல. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு யார் கையாளாக இருப்பது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல். பாசிஸ்டுகளை தேர்தல் மூலமாக வீழ்த்த முடியாது என்பதை தெளிவுபடுத்தியிருக்கும் தேர்தல் இது.


 
தென்னிந்தியாவை வட இந்தியா ஒருகாலும் வெற்றி கொள்ள முடியாது என்றார் புரட்சியாளர், அம்பேத்கர்.  அந்த வகையில் பகுத்தறிவு, மதசார்பின்மை, அரசியல் விழிப்புணர்வு போன்றவற்றில் முன்னணியில் இருக்கும் தமிழகம் பாஜகவின் பாசிசத்தை வீழ்த்தும் போராட்டத்தில் முன் நிற்க வேண்டும். ஜனநாயக சக்திகளும், அறிவுத்துறையினரும், புரட்சிகர இயக்கங்களும் ஓரணியில் திரண்டு வரப்போகும் பாசிச அபாயத்தை முறியடிக்க வேண்டும். மக்கள் சக்திக்கு முன்னால் கொடிய ஹிட்லரும், முசோலினியும் மண்ணாகிப்போன வரலாற்றை இந்தியாவிலும் நமது மக்கள் படைப்பர்கள்."என்றார் அவர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

''கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றி பேசுகிறார்''-வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 "Even Kamal Haasan talks about GST" - Vanathi Srinivasan Interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் பேசுகையில், ''ஒரு பக்கம் ஜிஎஸ்டியைப் பற்றி மாநில அரசு, திராவிட முன்னேற்ற கழகம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றிப் பேசுகிறார். கமல்ஹாசன் ஜிஎஸ்டி என்றால் என்ன என்று புரிந்து கொண்டுதான் பேசுகிறாரா? என்று தெரியவில்லை. அல்லது படத்தில் வர வசனமாக நினைத்துப் பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

இந்த ஜிஎஸ்டி இருப்பதால் இன்றைக்கு வரி வசூல் என்பது அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு கவர்மெண்டுக்கு எக்ஸ்ட்ரா ரெவென்யூ வந்துள்ளது. அதை விட்டுவிட்டு ஜிஎஸ்டியை நாங்கள் எதிர்க்கிறோம். ஜிஎஸ்டி பாதிப்பு என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஏமாற்றுவது என்பது திமுகவிற்கு ஒரு கலை. ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா? ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் ஸ்டேட் ஹோல்டர் இருப்பார்கள்.

ஜிஎஸ்டியால் ஒரு பிரச்சனை ஒரு மாநிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் மாநிலத்தினுடைய நிதியமைச்சர் அதை ஏன் அட்ரஸ் பண்ணாமல் இருக்கிறார்.  ஒவ்வொரு மாநிலத்தினுடைய நிதி அமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் மெம்பர்ஸ். ஏதோ மத்திய அரசு நேரடியாக எங்களுக்கு தெரியாமல் அமல்படுத்துகிறார்கள் என்பது போல பேசுவது உண்மை இல்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் எல்லா மாநிலத்தினுடைய பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி-ல ஏதாவது பிரச்சனை இருந்தால், இதை சரியாக ரெப்ரசன்ட் செய்து மாநில அரசு சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் நீங்கள் உங்களுடைய தரப்பு வாதத்தையோ, உங்கள் தரப்பு நியாயத்தையோ அங்குச் சொல்லி அதற்கான தீர்வு கொடுக்காமல், புறக்கணித்திருப்பது மாநில அரசு. இதில் மத்திய அரசு ஜிஎஸ்டில் தவறு செய்கிறது என்கின்ற ஆர்கியுமென்ட் வரக்கூடாது''என்றார்.

Next Story

“ஜி.எஸ்.டி: வரி அல்ல… வழிப்பறி” - முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடல்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
GST Not a tax a waybust says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ‘ஜி.எஸ்.டி.: வரி அல்ல… வழிப்பறி’ எனக் குறிப்பிட்டு புகைப்படத்துடன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “‘தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்’ என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், ‘ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார். பேச நா இரண்டுடையாய் போற்றி!. ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?. ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜி.எஸ்.டியைப் பார்த்து காப்பர் சிங் டேக்ஸ் (Gabbar Singh Tax) எனப் புலம்புகின்றனர்!. 

GST Not a tax a waybust says CM MK Stalin

அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜி.எஸ்.டி. கட்ட வேண்டுமா?. 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?. ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள். ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இந்திய கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.