Published on 04/10/2018 | Edited on 04/10/2018

பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கடந்த செவ்வாய்க்கிழமை ஜாமீனில் வெளியே வந்தார்.
தற்போது அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.