Skip to main content

கிரண்பேடி இனியாவது திருந்த வேண்டும்: அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் பேட்டி!

Published on 04/07/2018 | Edited on 04/07/2018
ADMK-Anbalagan


 

 

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ., அன்பழகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார். மாநிலத்தில் இரட்டை ஆட்சி நடைபெறும் சூழலை உருவாக்கி இருக்கிறார். அதிகாரிகள் யார் சொல்வதை கேட்பது என்பதில் குழம்பி தவிக்கிறார்கள்.

சட்டமன்றம் நடைபெறும் நிலையில், அதிகாரிகள் சட்டமன்றத்திற்கு வராமல் ஆளுநர் மாளிகைக்கு ஆய்வுக்கு செல்கின்றனர். இது ஆளுநர் கிரண்பேடி வேண்டுமென்றே செய்யும் குளறுபடியாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இனியாவது கிரண்பேடி தருந்துவார் என்று எதிர்பார்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆளும் கட்சியின் கொறடா அனந்தராமனும் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Edappadi Palaniswami meeting with the Governor

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்புடைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது.

இத்தகைய சூழலில் இன்று (25.06.2024) காலை தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியது. அப்போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் மூன்றாவது நாளாக அமளியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவைக்கு குந்தகம் விளைவித்ததால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும் இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். 

Edappadi Palaniswami meeting with the Governor

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார். அப்போது அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் உடன் இருந்தனர். ஆளுநரை சந்தித்து மனு அளித்த பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கள்ளக்குறிச்சியின் நகரின் மையப்பகுதியில் விஷச்சாராய விற்பனை நடைபெற்றுள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை” எனத் தெரிவித்தார். 

Next Story

“பாரத மாதா கண்ணீர் வடித்த நாள்...” - ஆளுநர் ஆர்.என்.ரவி!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Bharat Mata is a day of tears Governor RN Ravi

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1975 ஆம் ஆண்டு அவசர நிலையை அறிவித்த தினம் இன்று (ஜூன் - 25) ஆகும்.

இது தொடர்பாகத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “50 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 25, 1975 அன்று இந்த கருப்பு தினத்தில், அரசியலமைப்பைத் தூக்கியெறிந்தும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கியும், ஊடகங்களின் வாயைக் கட்டியும், நீதித்துறையை அடக்கிய சர்வாதிகாரியின் காலடியிலும் நமது ஜனநாயகம் எவ்வாறு நசுக்கப்பட்டது என்பதைத் தேசம் அதிர்ச்சியுடனும் திகிலுடனும் நினைத்துப் பார்க்கிறது.

ஆயுதமேந்திய ராணுவத்தினர் எங்கள் விடுதிக்குள் புகுந்து, விடுதி அறைகளை உடைத்து திறந்து, ரைஃபிள் துப்பாக்கியின் பின்பக்கத்தால் தாக்கி, புத்தகங்கள், உடைகளைக் கூட எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் எங்களை உடனடியாக வெளியேற்றிய நாளை நானும் எனது பல்கலைக்கழக நண்பர்களும் எப்படி மறக்க முடியும்?. சொந்தப் பிள்ளைகளாலேயே முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள் அது. நமது தேசிய வரலாற்றின் இந்த கருப்பு அத்தியாயத்தை யாரும் நினைத்துக்கூடப் பார்க்காத வகையில் நமது தாய்நாட்டின் கண்ணியத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான உறுதியுடன் இந்த நாளில் துக்கம் அனுசரிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.