Published on 10/03/2019 | Edited on 10/03/2019

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், “மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பேட்டரி டார்ச் சின்னம் மிகப்பொருத்தமானது. தமிழகத்தில் புதிய சகாப்தத்திற்கும், இந்திய அரசியலுக்கும் பேட்டரி டார்ச் சின்னம் புதிய ஒளி பாய்ச்சும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.