Skip to main content

IPL கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை எதிர்த்தால் அதை அரசியல் என்று சொல்வது கண்டனத்திற்குரியது: ஈஸ்வரன்

Published on 09/04/2018 | Edited on 09/04/2018


 

E.R.Eswaran


தமிழகத்தின் வாழ்வாதார போராட்டம் திசை மாறிவிடக்கூடாது என்று சென்னையில் IPL கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை எதிர்த்தால் அதை அரசியல் என்று சொல்வது கண்டனத்திற்குரியது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈ.ஸவரன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒட்டுமொத்த தமிழகமும் போராடி கொண்டிருக்கும் இந்த சூழலில் சென்னையில் IPL கிரிக்கெட் போட்டி நடத்த கூடாது என்று அனைத்துதரப்பினரும் ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்தால் தமிழகத்தின் உணர்வுகளை புரிந்து கொண்டு IPL போட்டியை வேறு மாநிலத்திற்கு மாற்றாமல் சென்னையில் தான் நடத்துவோம் என்றும், விளையாட்டிலிருந்து அரசியலை ஒதுக்கி வையுங்கள் என்றும் IPL  தலைவர் ராஜீவ் சுக்லா கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 
 

தமிழகத்தின் வாழ்வாதாரத்திற்காக போராடும் போராட்டம் திசை மாறிவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் மற்றும் மற்ற துறை சார்ந்தவர்களும் IPL போட்டியை சேப்பாக்கத்தில் நடத்த கூடாது என்று சொல்வதை அரசியல் நோக்கில் பார்ப்பது தவறு. ஒரு சிலரின் ஆதாயத்திற்காக கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து பொழுதுபோக்கிற்காக நடக்கும் விளையாட்டு IPL கிரிக்கெட். இப்படி வெறும் கொண்டாட்டத்திற்காக நடத்தப்படும் விளையாட்டை உரிமைக்காக போராடும் போராட்ட களத்தில் நடத்த வேண்டாம் என்று கூறினால் அதை அரசியல் என்று போராட்டத்தை கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. 
 

சென்னையில் IPL போட்டியே நடத்தக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. தற்போதைக்கு வேண்டாம் என்றுதான் வலியுறுத்துகிறோம். தமிழர்களுக்கு IPL கிரிக்கெட் போட்டியை விட தண்ணீர் முக்கியம். காவிரி விவகாரத்தில் பல ஆண்டுகளாக போராடி அதற்கான தீர்வை உச்சநீதிமன்றம் வழங்கியும் அதை நடைமுறைப்படுத்தாமல் மத்திய அரசு ஏமாற்றுவதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓயமாட்டோம் என்று தமிழகம் போராடி வருகிறது. 
 

தண்ணீர் இல்லாமல் இனி ஒரு விவசாயி தமிழகத்தில் இறக்க கூடாது என்ற போராட்டத்தின் உணர்வுகளை மற்றவர்கள் புரிந்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். IPL தலைவர் ராஜீவ் சுக்லா அவர்கள் கூறிய கருத்திற்கு உடனடியாக தமிழக மக்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும். எனவே தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெறவிருக்கும் IPL கிரிக்கெட் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.