Skip to main content

விசிக தலைவர் தொல். திருமாவளவன் கைது

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில், தமிழ் நாடு ஆளுநர் ஆர். என். ரவியின் செயல்பாடுகள் மற்றும் அவரின் நடவடிக்கைகளை கண்டித்து சென்னை சின்னமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 700க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இதில் “சனாதன சக்தியே, ஆர்.என். ரவியே, ஆர்.எஸ்.எஸ் தொண்டரே திரும்பிப் போ தமிழ்நாட்டில் இடமில்லை” போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை முன் முற்றுகை போராட்டம் நடத்த ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சி தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்