Skip to main content

சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர்கள் உயிரிழப்பு!

Published on 07/02/2021 | Edited on 07/02/2021

 

Fishermen boat capsize near Chidambaram

 

சிதம்பரம் அருகே முடசல் ஓடை பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு சொந்தமான படகில் சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் சிங்கார குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அப்பு( 40), எம்ஜிஆர் திட்டு கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன்( 60), வீரத்தமிழன்(50), தமிழன் (52) ஆகிய நான்கு நபர்களும் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

 

இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் மீன் பிடித்துக் கொண்டு கரை திரும்பும் போது வெள்ளாற்று முகத்துவாரம் அருகே வரும் போது அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் படகு கவிழ்ந்துள்ளது. இதில் அப்பு, குணசேகரன் ஆகிய இருவர் தப்பித்து கரை சேர்ந்தனர். மற்ற நபர்களான வீர தமிழன், தமிழன் ஆகிய இருவரும் காணமல் போனநிலையில் அவர்களை தேடும் பணிகள் நடைபெற்றது.

 

இந்நிலையில் இன்று அதிகாலை இருவரது உடலும் சடலமாக கரை ஒதுங்கியது. இதனைத் தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிள்ளை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்