Skip to main content

நட்சத்திர விடுதியில் தீ விபத்து! 

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

fire accident in Trichy Star hotel

 

திருச்சி தில்லைநகர் அருகில் தனியார் நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அந்தக் கட்டத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அதனை சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 


திருச்சி மெகா ஸ்டார் தியேட்டர் அருகில், பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு பின்னால் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மின்கசிவு காரணமாக நான்காவது மாடியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்தத் தீ மளமளவென நான்காவது தளம் முழுவதும் பரவியது. விடுதி நிர்வாகம் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தது. 


அந்தத் தகவலின் அடிப்படையில் திருச்சி ஸ்ரீரங்கம், கண்டொன்மெண்ட் உள்ளிட்ட தீயணைப்புத் துறை அலுவலகங்களில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு சுமார் 20 தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஏறத்தாழ ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 


முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் ஏதுமில்லை என்றாலும் ஹோட்டலின் 4 வது தளம் முழுவதும் எரிந்துள்ளதால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Incident happened 6 people for Terrible fire at hotel in patna

பீகார் மாநிலம், பாட்னா சந்திப்பு ரயில் நிலையம் அருகே தனியார் அடுக்குமாடி ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஹோட்டலில் இன்று (25-04-24) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சிலர் சிக்கினர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு அங்கு ஏற்பட்டிருந்த தீயை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தப் பயங்கர தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், அங்கு படுகாயமடைந்திருந்த 20க்கும் மேற்பட்டவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தத் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.