Skip to main content

உறுப்புகளை தானம் வழங்க சம்மதித்த குடும்பத்தினர்: சாதனை புரிந்த மருத்துவர்கள்!

Published on 08/07/2021 | Edited on 08/07/2021
Family members who agreed to donate organs: Achieving doctors

 

ஈரோடு அருகே, சாலை விபத்தில் மூளை இறப்பு ஏற்பட்ட அரசுப் போக்குவரத்து ஊழியரிடமிருந்து தானமாக பெறப்பட்ட சிறுநீரகங்கள், கண்கள், தோல் ஆகிய உறுப்புகள் 5 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள பி.ஆர்.எஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (53). காங்கேயம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றிவந்தார்.  கடந்த 1ஆம் தேதி, மோட்டார் சைக்கிளில் பெருந்துறைக்குச் சென்றுவிட்டு, வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

 

அப்போது எதிரில் தாறுமாறாகவந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், பழனிசாமியின் வாகனத்தின்மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமிக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், ஜூலை 2ஆம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 4ஆம் தேதி அவர் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். மூளை இறப்பு ஏற்பட்ட பழனிசாமியின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அவருடைய குடும்பத்தினர் முன்வந்தனர். மனைவி ஜெயமணி, மகள்கள் சவுந்தர்யா, சுகுணா ஆகியோர் கணவர்/தந்தை இழந்த துக்கத்தைத் தாளாத நிலையிலும் பிறரின் துயரத்தைப் போக்க உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க சம்மதித்தனர்.

 

இதையடுத்து ஜூலை 6ஆம் தேதி, பழனிசாமியின் முக்கிய உடல் உறுப்புகள் தானம் வழங்குவதற்கு ஏற்ற வகையில் நல்ல நிலையில் உள்ளதா என 20 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் ஆய்வுசெய்தனர். இக்குழு, பழனிசாமியின் உடலில் இருந்து 2 சிறுநீரகங்கள், 2 கண்கள், தோல் ஆகியவற்றைப் பாதுகாப்பாக அகற்ற முடிவு செய்து, அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். பழனிசாமியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகங்களில் ஒன்று, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் பெண் ஒருவருக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவருக்கும் பொருத்தப்பட்டது. தோல் மற்றும் 2 கண்களும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டது.

 

சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சேலம் மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி கூறுகையில், “பழனிசாமியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகங்களில் ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளிக்கு உடனடியாக பொருத்தப்பட்டது. மருத்துவர்கள் குழு பரிசோதனையில் பழனிசாமியின் கல்லீரல், இதயம் ஆகிய முக்கிய உறுப்புகள் தானம் கொடுக்கப்படும் நிலையில் இல்லை. அவை பாதிக்கப்பட்டிருந்தன” என்றார். இதற்கிடையே, பழனிசாமியின் உடல் உறுப்புகள் மூலம் 5 நோயாளிகளின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்பட்டுள்ள தகவலால் அவருடைய மனைவி, மகள்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது” - உதயநிதி குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Udhayanidhi alleges Central govt is looting through GST

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில், ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து இன்று (ஏப்.16) காலை பிரச்சாரம் செய்தார் அமைச்சர் உதயநிதி. அப்போது அவர் பேசியதாவது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்கத் தவறிய மக்களும் பெருமைப்படும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பணிபுரிந்து வருகிறார்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனார் ஸ்டாலின். ஆனால், பழனிசாமியை நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. பாஜகவுடன் நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து, தமிழகத்தின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி உரிமைகளை பழனிசாமி விட்டுக் கொடுத்து விட்டார். நீட் தேர்வுக்கு போராட்டம் பாஜகவுக்கு பயந்து நீட் தேர்வினை தமிழகத்தில் அனுமதித்து விட்டார். நீட் தேர்வினால், இதுவரை 21 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு, நீட் தேர்வினை ரத்து செய்ய சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. கரோனா காலத்தில், பி.எம்.கேர் என்ற பெயரில், வசூலிக்கப்பட்ட ரூ.32 ஆயிரம் கோடிக்கு இதுவரை கணக்கு காட்டவில்லை. ஆனால், தமிழகத்தில் கரோனா காலத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது. இலவச பேருந்து பயண சலுகையை, ஈரோடு மாவட்டத்தில் 21 கோடி முறை பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் 11 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். காலை உணவுத் திட்டத்தில், 56 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 4 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை, ரூ.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புறநகர் பேருந்து நிலையம், சோலார் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறிகள் சந்தை, சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் நினைவிடம் அமைக்க இடம் தேர்வு, அறச்சலூர் மலை கோயிலுக்கு செல்ல பாதை வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. முதலமைச்சர் காலை உணவு திட்டம் இந்தியாவில் சிறப்பு வாய்ந்த திட்டமாக உள்ளது. இத்திட்டம் மூலம், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை உணவு திட்டம் செயல்படுத்த இருப்பது தான் திராவிட மாடல் அரசு சாதனை. கடந்த 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பாஜக தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது மத்திய அரசு உதவி செய்யவில்லை. ஜிஎஸ்டி மூலம் வசூல் செய்யப்படும் தொகையை மத்திய அரசு முறையாக, சரிசமமாக, மாநிலத்துக்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், 29 பைசா மட்டும் திரும்ப வருகிறது.

தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக தற்போது அடிக்கடி வருகிறார். பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்று இப்போது நாடகம் போடுகின்றனர். தேர்தலுக்கு பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். கடந்த தேர்தலில் அடிமை அதிமுக வை விரட்டி அடித்தது போல, இந்த முறை அதிமுக எஜமானர்களான பாஜகவையும் விரட்டி அடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் உதயநிதி தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடி- அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் இருக்கும் படம், செங்கல், 29 பைசா பதாகை போன்றவற்றை காட்டி அதுகுறித்து விளக்கம் அளித்தார்.

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார்.