Skip to main content

ஊசி போட சொன்ன மருத்துவர்; காலணியால் அடித்த இளைஞர்; வைரலாகும் வீடியோ

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

The doctor who ordered the injection; A youth beaten by a shoe; A viral video

 

மருத்துவமனையில் ஊசி போடச் சொன்ன பெண் மருத்துவரை இளைஞர் ஒருவர் காலணியால் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் குமிழியம் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது குமிழியம். இங்கு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று உள்ளது. இந்நிலையில் குமிழியும் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அவருடைய சகோதரி மகனை சிகிச்சைக்காக அந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கு பணியாற்றி வந்த மருத்துவர் சத்யா சிறுவனுக்கு ஊசி போட வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் சிறுவனோ ஊசி போட விடாமல் கத்தி கூச்சலிட்டான். சமாளிக்க முடியாமல் திணறிய சுரேஷ் அங்கு நின்று கொண்டிருந்த மருத்துவர் சத்யாவின் கணவர் சிலம்பரசனை குழந்தையை ஒரு கை பிடித்து ஊசி போட உதவுமாறு கேட்டுள்ளார். ஆனால் சிலம்பரசன் கையில் குழந்தையுடன் இருந்ததால் தன்னால் பிடிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் 'ஒரு உதவி கேட்டால் பண்ண மாட்டியா' என கூச்சலிடத் தொடங்கினார். தொடர்ந்து அங்கு ஏற்பட்ட விவாதமானது கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுரேஷ் காலில் மாட்டி இருந்த காலணியை எடுத்து மருத்துவர் சத்யாவை தாக்க முயன்றார். மேலும் மருத்துவரின் கணவர் சிலம்பரசனை ''வெளியே போடா... நீ எந்த ஊர்'' என திட்டினார். மருத்துவர் சத்யாவும் 'உன் பிள்ளையை பிடிக்க உன்னால முடியல நீ என்ன திட்றியா' என பதிலுக்கு பேசினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

 

மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீஸாருக்கு தகவல் அளித்தும் ஒருவர் கூட அங்கே வராததால் மருத்துவர் சத்யா இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட சுரேஷை போலீசார் கைது செய்துள்ளனர். அண்மையில் கேரளாவில் மருத்துவர் ஒருவர் சிகிச்சை பார்க்க வந்த கைதியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்