Published on 16/12/2019 | Edited on 16/12/2019
மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை (17.12.2019) டெல்லி செல்கிறார். 2020- 2021 நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசிக்கிறார்.
![TAMILNADU DEPUTY CM O PANEER SELVAM ARRIVE AT DELHI](http://image.nakkheeran.in/cdn/farfuture/qCvwL5PWQSixx7e10T42qZtg1RHMnCww8_aeYM9uy1M/1576508121/sites/default/files/inline-images/OPS3.jpg)
இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 19- ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கிறார். அப்போது தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும், முக்கிய கோரிக்கைகள் தொடர்பான மனுவை முதல்வர் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.