Skip to main content

தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தாய், மகள் அபார வெற்றி! சேலத்தில் சுவாரஸ்யம்!! 

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

dmk Mother and daughter who competed on behalf of the huge success!

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் ஆளும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அபார வெற்றி பெற்றுள்ளன. சேலம் மாநகராட்சியில் உள்ள 60 கோட்டங்களில் தி.மு.க. கூட்டணி 50 வார்டுகளிலும், அதிமுக 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், சேலம் மாநகராட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெற்றி பெற்றுள்ள சுவாரஸ்யமான நிகழ்வும் அரங்கேறியிருக்கிறது.

 

dmk Mother and daughter who competed on behalf of the huge success!

 

தி.மு.க. சார்பில், சேலம் மாநகராட்சி 41- வது வார்டில் பூங்கொடி சேகர், அவருடைய மகள் க.கனிமொழி 54- வது வார்டிலும் போட்டியிட்டனர். இவர்கள் இருவருமே வெற்றி பெற்றனர். 

 

dmk Mother and daughter who competed on behalf of the huge success!

 

கனிமொழியின் மாமன் எம்.அசோகன், 52- வது வார்டில் தி.மு.க. சார்பில் களமிறங்கினார். அவரும் அபார வெற்றி பெற்றார். கனிமொழிக்கு ஆதரவாக அசோகனும் பரப்புரையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், உறவினர் வெற்றி பெற்ற நிகழ்வு தி.மு.க. தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


 

சார்ந்த செய்திகள்