Skip to main content

அமிர்தி காட்டுக்குள் நடந்த கொடூரம்... கதறிய காதலி... காப்பாற்றிய சாமானிய மக்கள்!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

வேலூர் மாவட்டம், ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ளது அமிர்தி வனப்பகுதி. இது சுற்றுலா தலமாகவும் உள்ளது. இங்கு தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சுற்றுலா வருகின்றனர். இதில் அதிகளவு வருவது காதலர்கள் என்பது குறிப்பிடதக்கது.

வேலூர் மாநகரில் உள்ள பிரபலமான அந்த கல்லூரியில் ராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மூன்றாம்மாண்டு படிக்கும் மாணவியும், வேலூர் வேலப்பாடியை சேர்ந்த அந்த மாணவியும்   காதலனும், அமிர்திக்கு வந்துள்ளார்கள்.

 

defeat incident in amirthy forest

 

காடு பகுதியான அமிர்த்தியின் அடர்ந்த பகுதிக்கு காதலர்கள் சென்றுள்ளனர். அங்கு காதலனின் நண்பர்கள் 3 இளைஞர்கள் இருந்துள்ளனர். அவர்களிடம் இவள் தான் என் காதலி என அறிமுகம் செய்துள்ளான். காதலனின் நண்பர்கள் பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளனர். அந்த மிருகங்களிடம்மிருந்து தப்பி ஓடிவந்துள்ளார் அந்த மாணவி. என்னை காப்பாத்துங்க என கத்தி அழுதுக்கொண்டே ஓடிவர அங்கு விறகு பொறுக்கவும், கால்நடை மேய்க்கவும் வந்திருந்தவர்களின் காதுகளில் சத்தம் கேட்டு, அவர்கள் சத்தம் வந்த பகுதியை நோக்கி ஓடிவந்துள்ளனர். ஆடை கிழிந்து மானத்தை காப்பாற்றிக்கொள்ள ஓடிவந்த அந்த மாணவியை காப்பாற்றிய சமானிய மக்கள், துரத்தி வந்தவன்களை மடக்கியுள்ளனர். காதலன் மட்டும் சிக்க, மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனராம்.

காதல் என்கிற பெயரில் மாணவியை மயக்கி நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்றவனை பிடித்து மிதிமதியென மிதித்துள்ளனர். பின்னர் செல்போன் மூலமாக அந்த பெண்ணின் பெற்றோரை வரவைத்து அவர்களிடம் அந்த மாணவியை ஒப்படைத்துள்ளனர்.

இதுப்பற்றி புகார் தந்தால் மகளின் மானம் மட்டும்மல்ல, குடும்ப மானமும் போய்விடும் என்பதால் அந்த மாணவியின் குடும்பம் புகார் தராமல் விட்டுள்ளது. அதோடு கல்லூரிக்கு அனுப்புவதையும் நிறுத்தியுள்ளது என கூறப்படுகிறது.

இந்த தகவல் தற்போது பரவி வேலூர் மாநகரில் கல்லூரி மாணவ – மாணவிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

கடையில் புகுந்து திருட முயன்ற நபர்; பெண் ஊழியர்களின் செயலால் பதறியடித்து ஓட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Female employees who were beaten with a whip on Mysterious person who tried to steal

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே ‘குடியாத்தம் பலகாரம்’ என்ற பெயரில் தின்பண்ட கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில், முழுவதும் பெண் ஊழியர்களே பணியாற்றி வருகின்றனர். இந்தக் குடியாத்தம் பலகார கடைக்கு அருகிலேயே மற்றொரு கடை ஒன்று உள்ளது. பெண்கள் அங்கும் சென்று பணியாற்றுவார்கள், அங்குள்ள பெண்கள் இங்கும் வந்து பணியாற்றுவார்கள்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (27-04-24) பெண் ஊழியர்கள் அருகில் உள்ள அவர்களது மற்றொரு கடைக்கு சென்று இருந்தனர்.  சில பெண்கள், கடை மாடியில் இருக்கும் பொருட்களை எடுக்கச் சென்றனர். அப்போது கல்லாவில் யாரும் இல்லாத நிலையில், மர்ம நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தைத் திருட முயன்றார்.

அப்போது, கடைக்குள் வந்த இரண்டு பெண் ஊழியர்கள் திருட வந்த மர்ம நபரை அங்கிருந்த துடப்பத்தால் அடித்து அங்கிருந்து விரட்டி அடித்தனர். இந்தச் சம்பவம், அங்குள்ள சி.சி.டி.வி கேமாராக்களில் பதிவாகியுள்ளன. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில், கடையில் திருட வந்த அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் திருட வந்த மர்ம நபரை, பெண் ஊழியர்கள் துடப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.