Skip to main content

தலித் பெண்ணை கோவிலுக்குள் நுழைய விடாமல் விரட்டிய அவலம்!

Published on 01/05/2018 | Edited on 01/05/2018
kovil

 

புதுச்சேரி கூனிச்சம்பட்டு பகுதியில் கோவிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை அங்கிருப்பவர்கள் வெளியேற்றும் காட்சி சமூகவலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன், கூனிச்சம்பட்டு பகுதியை சார்ந்த ராதா என்பவர் தலித் இனத்தை சேர்ந்தபெண். இந்தப் பெண் கூனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ள துரோபதி அம்மன் கோவிலுக்கு நேற்று முன்தினம் சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சிலர், இங்கு வந்து சாமி கும்பிடக் கூடாது என்றும், உங்கள் கோவிலுக்குள் வருகிறோமா...  ஏன் எங்கள் கோவிலுக்கு வருகின்றாய்? என்று கேட்க,    "ஏன் நான் சாமி கும்பிட வரக்கூடாது? " என்று அந்தப் பெண் எதிர்கேள்வி கேட்கின்றார். 

 

puthuchery

 

இதனையடுத்து அவர்கள், கோவிலிலிருந்து  அந்தப் பெண்ணை வெளியேறச் சொல்கின்றனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் வருகின்றது.  தொடர்ந்து ஒரு பெண், அந்தப் பெண்ணைப் பிடித்து இழுக்கின்றார். "என்னை இழுக்கக்கூடாது, சாமி கும்பிட்டு விட்டு செல்கின்றேன்"  என்று மீண்டும் கூறியபோது, அங்கிருந்த ஆண்கள்  அவரை உடனடியாக வெளியேறச் சொல்கின்றனர். அவரை வலுக்கட்டாயமாக வெளியேறச் சொல்வதால் வேறு வழியில்லாமல் செல்கின்றார். 

 

ஒரே கிராமத்தை சார்ந்தவர்கள் கோயிலில் சாமி கும்பிட சென்ற போது கோவிலினுள் அனுமதிக்காமல் வெளியேற்றிய நிகழ்வானது  சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.