Skip to main content

மக்கள் வருகை குறைந்ததால் சில சிறப்பு ரயில்கள் ரத்து!

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

கரோனா காரணமாக பயணிகள் வருகை மற்றும் முன்பதிவு குறைவால் சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரத்துக்கு வாரம் இருமுறை செல்லும் விரைவு ரயில் சேவை மார்ச் 31- ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை- மதுரை துரந்தோ வார இருமுறை விரைவு ரயில் சேவை மார்ச்- 31 ஆம் தேதி வரையும், சென்னை சென்ட்ரல்- செகந்திராபாத் வார இருமுறை சிறப்பு ரயில் சேவையும் மார்ச்- 20 ஆம் தேதி மற்றும் மார்ச்- 22 ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

coronavirus issues peoples special trains stop

செகந்திராபாத்- சென்னை சென்ட்ரல் வார இருமுறை சிறப்பு ரயில் சேவை மார்ச்- 21 மற்றும் மார்ச்- 23 ஆகிய தேதிகளில் ரத்து செய்துள்ளது. எர்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு ரயில் 21- ஆம் தேதியும், வேளாங்கண்ணி- எர்ணாகுளம் ரயில் 23- ஆம் தேதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்