Skip to main content

கரோனா கட்டுப்பாடு: டிச.13- ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

Corona control: Chief Minister MK Stalin's advice on Dec. 13!

 

கரோனா கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்து டிசம்பர் 13- ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். 

 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தமிழ்நாடு காவல்துறை தலைவர் முனைவர் செ.சைலேந்திர பாபு இ.கா.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 

 

இக்கூட்டத்தில் கரோனா பாதிப்பு, கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளார்.

 

இந்த கூட்டத்திற்குப் பிறகு தளர்வுகளுடன் கூடிய கரோனா ஊரடங்கை நீட்டிப்பதா, வேண்டாமா என்பது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்