Skip to main content

நடுக்கடலில் தொடரும் மீனவர்கள் மீதான தாக்குதல்; பீதியில் தமிழக மீனவர்கள்...!

Published on 23/03/2021 | Edited on 23/03/2021
Continued attacks on fishermen in the Mediterranean Tamil Nadu fishermen in panic

 

நடுக்கடலில் கொடூர ஆயுதங்களை கொண்டு மீனவர்களை மிரட்டுவதும், தாக்குவதும் சமீபத்தில் அதிகரித்துள்ளது. நாகை மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்திமுனைகொண்டு சரமாரி தாக்குதல் நடத்தியதோடு, தூண்டில் கம்பிகளை உடலில் மாட்டி இழுத்து சித்திரவதை செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது.

 

நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த முத்துக்குமரன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். கடந்த 21ம் தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள் கோடியக்கரை தென்கிழக்கே 15 நாட்டிகள் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இரண்டு திசைகளில் இருந்து அதிவேக இரண்டு படகுகள் வந்தன, அந்த படகில் வந்த 15 இலங்கை கடற்கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நாகை மீனவர்களின் மீது சரமாரியாக தாக்கினர். அதோடு மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி படகுகளில் நாகை மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிக்க முயன்றுள்ளனர்.

 

Continued attacks on fishermen in the Mediterranean Tamil Nadu fishermen in panic

 

அதனை நாகை மீனவர்கள் தடுக்க பெரும்முயற்சி செய்துள்ளனர், ஆனாலும் கூர்மையான தூண்டில் கம்பிகளை உடலை மாட்டி சித்தரவதை செய்து தண்ணீரில் தள்ளிவிட்டுவிட்டு கொள்ளை சம்பவத்தை அறங்கேற்றியுள்ளனர். படகில் இருந்து வலை, வாக்கி டாக்கி, ஜி.பி.எஸ் கருவி மற்றும் 3 லட்சம் மதிப்பிலான மீன்கள் என அனைத்தையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றிருக்கின்றனர். படுகாயங்களோடு சுமார் ஒரு மணி நேரம் கடலில் தத்தளித்து அதிரச்சியடைந்த நாகை மீனவர்களை. அவ்வழியே வந்த நாகையைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் பார்த்துவிட்டு கடலில் தத்தளித்த செருதூர் மீனவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்துள்ளனர். கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு ஆளான கண்ணன், முருகன் உள்ளிட்ட 6 மீனவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

 

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வெள்ளப்பள்ளம் மீனவர்கள் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர், அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதற்குள் செருதூர் கிராம மீனவர்களை தாக்கப்ப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 


 

சார்ந்த செய்திகள்